HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மார்பு, மார்பு காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும்? பெண்களுக்கும் சீம்பால் வருமா? எப்போது வரும்?

♥மார்பு, மார்பு காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும்? பெண்களுக்கும் சீம்பால் வருமா? எப்போது வரும்?

♥ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததும் அவள் உடம்பில் ஏராளமான மாற்றங்களை நிகழும். கருவில் வளரும் குழந்தைக்கு தகுந்த மாதிரி அவளின் வயிறு, மார்பகங்கள் எல்லாம் பெரிதாகும். இந்த மாதிரியான சமயங்களில் மார்பகத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அப்பொழுது தான் பிறக்கின்ற குழந்தைக்கு ஆரோக்கியமான தாய்ப்பால் கிடைக்கும்.

♥மார்பகத்தை எந்தவித தொற்று இல்லாமல் சுத்தமாக பராமரிப்பது மிகவும் அவசியம். தாய்ப்பால் சுரப்பிற்கு தகுந்த மாதிரி மார்பகங்கள் வளர்ச்சி அடையும், மார்பக திசுக்கள் மாற்றமடையும், புரோஜெஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு பால் சுரப்பு ஏற்படும். எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை கீழ்க்கண்டவாறு காணலாம்.

#மார்பகத்தில்_ஏற்படும்_மாற்றங்கள்
♥கர்ப்ப காலத்தில் பெண்களின் மார்பகம் முதலில் பெரிதாகும். மார்பக காம்புகளில் சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வை பெறுவார்கள். சில நேரம் எரிச்சல் கூட ஏற்படும். மார்பகம் கனமாக இருப்பது போன்று உணர்வார்கள்.

♥மார்பகத்தில் உள்ள தோல் விரிவடைந்து, இதனால் அந்த இடத்தில் அரிப்பு மற்றும் தழும்புகள் ஏற்படும்.
அந்த பகுதியில் நீல மற்றும் பச்சை நிற இரத்த நாளங்கள் வெளியே தெரியும்.
சிறிய மார்பக தோற்றம் மாறி பெரிதாக காட்சியளிக்கும்.

♥குழந்தை பிறப்பதற்கு முன் சீம்பால் வரும்.
மார்பக கட்டிகள் சில இட‌ங்க‌ளி‌ல் தென்படும், பெரிதாக கவலை கொள்ள வேண்டாம்
என்றாலும் மருத்துவரை அணுகி ஆலோசித்து கொள்வது நல்லது.
இந்த சிவந்த கட்டிகள் பெரும்பாலும் பால் கட்டுவதால் ஏற்படுகிறது. மெதுவாக வெதுவெதுப்பான மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து கட்டிகளை கரைத்து விடும். மிகுந்த வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள்.

#மார்பககாம்புகளில்_ஏற்படும்_மாற்றங்கள்
♥மார்பக காம்புகள் மிகவும் சென்ஸ்டிவ் ஆன பகுதி. அதிலும் சூடான மற்றும் குளிர் நிலையில் மிகுந்த சென்ஸ்டிவ் ஆக இருக்கும்.
மார்பக காம்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி கருப்பாகும்.அதைச் சுற்றி முடி வளர ஆரம்பிக்கும்.
மார்பக காம்புகளை சுற்றி சின்ன சின்ன பருக்கள் தோன்றும். அது வலியை உண்டாக்கும்.
இதனுடைய வேலை குழந்தை பால் குடிக்க ஏதுவாக காம்புகளை வைக்க பயன்படுகிறது.

#மார்பகங்களை_எப்படி_பராமரிப்பது
♥சரியான உள்ளாடை அணிதல்
கர்ப்ப காலத்தில் மார்பகம் பெரிதாக ஆரம்பித்ததும் சரியான பிராவை தேர்ந்தெடுக்க வேண்டும். இது உங்களுக்கு நல்ல சப்போர்ட் ஆக இருக்கும். காட்டன் வகை பிராக்கள், சாஃப்ட் பேடிங் பிராக்கள் சிறந்தது. புஷ் அப் பிராக்கள் அணிய வேண்டாம். இது மார்பகத்தில் பாலைக் கட்ட வைத்து முலையழற்சியை உண்டாக்கி விடும். எனவே பிராக்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.

#வெதுவெதுப்பான_மசாஜ்
♥மார்பகத்தில் உள்ள தோல் விரிவடைவதால் மார்பக காம்புகளில் பிளவு, வெடிப்பு உண்டாகும். எனவே வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கொண்டு மெதுவாக விரல்களால் மசாஜ் செய்து விடலாம். இது உங்கள் மார்பகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

#சுத்தமாக_வைத்திருத்தல்
♥கர்ப்ப கால கடைசி மாதத்தில் சீம்பால் சுரக்க ஆரம்பிக்கும். அப்பொழுது வெட் டிஸ்யூ பேப்பர் கொண்டு துடைக்கலாம். சோப்பு போன்றவற்றை கொண்டு சுத்தப்படுத்த வேண்டாம். இது மார்பகங்களில் வெடிப்பை ஏற்படுத்தி விடும். தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு மார்பக காம்புகளை மசாஜ் செய்யலாம். இது மிருவாக்கி வெடிப்பில்லாமல் பார்த்துக் கொள்ளும். குளிக்கும் போது பெருவிரல் ஆள்காட்டி விரலால் மார்பக காம்புகளை இழுத்து விடலாம். இது பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

Post a Comment

0 Comments