HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அப்பா சுயநலமில்லா அன்பின் மூன்றெழுத்து மந்திரம்-அப்பா. அம்மாவின் அன்பை விட சிறந்த அன்பு உலகில் இருக்கிறதென்றால் அது அப்பாவின் அன்பு

♥#அப்பா
சுயநலமில்லா அன்பின் மூன்றெழுத்து மந்திரம்-அப்பா. அம்மாவின் அன்பை விட
சிறந்த அன்பு உலகில் இருக்கிறதென்றால்
அது அப்பாவின் அன்பு !

♥அம்மா-அன்பை அன்பாக காட்டுவார்.
அப்பா-அன்பை கண்டிப்பாக காட்டுவார்.

♥பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
    அம்மாவை பாட்டியாக பார்க்கலாம்.
பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
   அப்பாவை குழந்தையாகவே பார்க்கலாம்!

♥மகளிடம் தோற்பதை  லட்சியமாய் கொண்டவர் !
மகள் தோற்றாலும் வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில மகள் வேகத்துக்கு நடப்பவர் !
மகள் ஒடுவதை ஒதுங்கி நின்று ரசிப்பவர் !

♥முதுமையில் மகள் கரம் பிடித்து
குழந்தைப் போல் நடப்பார்
அப்பா !

♥கொண்டுவந்தால் தான் தந்தை என்று
யார் பொய் சொன்னது.
தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர்
தந்தை உண்மை சொல்கிறது !

♥மகளின் முதல் கதாநாயகன்
முதல் வில்லன்
அப்பா !

♥மகள் விழும் போது எழுவோம் என்று
நம்பிய முதல் மனிதர்
அப்பா !

♥"முடியாது" என்ற ஒற்றை வார்த்தையில்
கொடுத்த செயற்கை வலியால்
"முடியும்" என்ற நம்பிக்கையை
விதைத்தவர் அப்பா !

♥தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை....

♥நம்மை முன்னே நடக்க சொல்லி
பின்னால் மகிழ்வதும்,
நம்மை முன்னேற சொல்லி
பின்னின்று ஆனந்தப்படுவதும்,
இவரால் மட்டுமே முடியும் -அப்பா

♥கோபத்தில் கண்டபடி நம் முன்னால் அதிகம்  திட்டினாலும்..
உடல் நல குறைபாடு ஏற்பட்டு
அயர்ந்து தூங்கும் பொழுது
நமக்கே தெரியாமல் நம்
கால்களை நீவி விட்டு நமக்காக சில
துளி கண்ணீர் விடுவார்
நம் தந்தை....

♥தோளில் சுமந்தாலும் ,
வார்த்தையால் வழி நடத்திய,
கண்ணறிந்த தெய்வம் நீ

♥வெளிப்படையாய் அன்பு காட்டி
நடிக்கும் உறவினர்கள் மத்தியில்
உள்நெஞ்சில் ஆழ் கடல் அன்பால்
என்னை வழி நடத்தியவன் நீ

♥என்றும் நீயே என் வழிகாட்டி
என்றும் நீயே என் தெய்வம் தந்தையே !!
ஐந்திரண்டு மாதம் சுமந்து
வலிகொண்டு பெற்றாள் அன்னை!!
ஆனால் இருபது  வருடமாய்
சுமக்காமல் சுமந்தாயே என்ன சொல்ல உன்னை...

♥அன்பை உள்ளே வைத்து கொண்டு
எதிரியை போல் தெரியும் ஒரே உறவு
-அப்பா உலகில் விலை மதிப்பில்லாதது
அன்பு ஒன்றுதான்  ஏனோ  அது மட்டும் விலை இல்லாமல் கிடைப்பதால் தான்
அதை யாரும் உணரவில்லை..

♥கால தாமதம் ........
தாய், தந்தை  இந்த பொக்கிஷங்கள் உடனிருக்கும் பொது பணத்தை தேடி அலைந்தேன், பணம் வந்த வேளையிலே பொக்கிஷங்களை இழந்தேன்....
உண்மையை விட்டு பொய்யை தேடி வெகுதூரம்  அலைந்தேன்,
காலன் போட்ட கணக்கினாலே அத்தனையும்  இழந்தேன்,
எனது உறவுக்கு துவக்கம் தந்த உங்களை காண தவம் கிடக்கின்றேன்.....
கருணையோடு வாய்ப்பு கொடுங்கள் உங்கள் காலடி தொழுது கிடக்க

♥தாயின் பாரம்
பத்து மாதம் தான்
நீயோ ஆயிள் வரை
சுமக்கும் தாயாகிறாய்
அறிவுக்கே அறிவுரை
கூறும் ஆசானே
ஆயிரம் வித்தகர்களை
உன் ஒற்றை வார்த்தையில் கண்டேன்
பார்வையால் சுட்டெரிக்கும் சூரியனாய்
பணிவால் உருகச் செய்யும் பனிமலையாய்
அன்பை மட்டுமே அடை மழையாய் பொழியும்
தந்தை எனும் விந்தையே
ஆண்டவனே அடைக்கலம் தேடும்
உன் அன்பு நெஞ்சம் தான்
எனக்குத் தஞ்சம்....

♥என்னை பத்து மாதம்
கருவறையில் சுமந்தவள்
என் தாய் என்றால்
என் தாயையும் சேர்த்து
என்னையும்
தன்  நெஞ்சிலே சுமந்தவர்
என் அப்பா....

♥பொறுமையே இல்லாதவன் கூட
ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும் ஆனால் பொருப்புள்ளவன் தான் தந்தையாக முடியும்...

♥கடவுள் கொடுத்த வரம்
கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார் வரமாக-அப்பா

♥உன்னை வயிற்றில் சுமக்கும்
பாக்கியம் எனக்கு இல்லை
ஆகையால் நெஞ்சில் சுமந்து
தீர்த்துக்கொள்கிறேன்.....

♥உன் விருப்படியே படித்தேன்
பட்டமும் பெற்றேன்...,
பாராட்ட நீ இல்லையே-"அப்பா"

♥நல்லதொரு வேலையும் பெற்றேன்...,
நீ இல்லையே சந்தோசப்பட....

♥என்னிடம் பொய் கூறி விட்டாய்
காலம் முழுவதும் சுமப்பேன் என்று...,
உன்னை நினைக்கும் போது- ஆறுதல் சொல்ல கண்ணீர் மட்டுமே எனக்கு...,

♥-ஆனால்
என்னை பற்றிய நினைவே இல்லாமல் -
உறங்கி கொண்டிருக்கிறாய் மண்ணுக்குள்ளே....

♥அம்மாவிடம் பாசத்தையும் அப்பாவிடம் நேசத்தையும் இன்றே உணர்த்துங்கள் சில நாளைகள் இல்லாமலும் போகலாம்...

♥நானும் காட்டியதில்லை அவரும் காட்டியதில்லை எங்கள் பாசத்தை... இருந்தும் காட்டிக் கொடுத்த கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை

♥சொல்லிக் கொடுத்ததில்லை திட்டியதும் இல்லை இல்லை என்றும் சொன்னதுமில்லை வேண்டாம் எனக் கூறியதும் இல்லை இருந்தும் ஏதோ ஒன்றினால் கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு....

♥அம்மா செல்லமா அப்பா செல்லமா என கேட்டபோதெல்லாம் பெருமையாகச் சொல்லி இருக்கிறேன் அம்மா செல்லமான அப்பா செல்லம் என இன்று அப்பா சென்ற பின்னர் நான் யார் செல்லம்..?

♥லேசாக என் கால் தடுமாறினாலும் பதறும் அப்பா இன்று நான் தடுமாறிய போது பதறாமல் இருக்கிறார் மீளா துயிலில்...

Post a Comment

0 Comments