HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு இளைஞன், விவசாயி ஒருவரின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவரிடம் சென்று அனுமதி கேட்டான்.

♥ஒரு இளைஞன், விவசாயி ஒருவரின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவரிடம் சென்று அனுமதி கேட்டான். அதற்கு அந்த விவசாயி இளைஞனைப் பார்த்து சொன்னார்.

♥தம்பி... நீ என் மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும்.

♥என் மகளை மணம் முடிக்க சம்மதிக்கிறேன் என்று கூறினார். அதற்கு அந்த இளைஞனும் ஒத்துக்கொண்டான். மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது. முதலில் ஒரு மாடு வந்தது.

♥மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது. அதை பார்த்த இளைஞன் வாலை பிடிக்கத் தயங்கி அடுத்த மாட்டை பார்க்கலாம் என்று விட்டுவிட்டான். சிறிது நேரத்தில் அதை விட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது.

♥பார்க்கவே பயங்கரமான தோற்றம். அவனை முட்டி தள்ளுவதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம். மூன்றாவதை பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான்.

♥ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடி சென்றது. மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டை பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது.

♥அவன் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும், தோலுமாய் பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் நடந்து வந்தது. இந்த மாட்டை விடக்கூடாது.

♥இதைத்தான் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலை தொட தயாராக இருந்தான். மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலை தொடப்போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம். அந்த மாட்டுக்கு வாலே இல்லை.

♥♥நண்பர்களே... நமது வாழ்க்கையும் இப்படித்தான்...
அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது...
சில வாய்ப்புகள் எளிதாக தோன்றலாம்...
சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம்...
நாம்தான் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.♥♥

Post a Comment

0 Comments