HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு_ஆணை_நம்பி_தன்_அந்தரங்கங்களை_காட்டிய_ஒரு_பெண்ணின்_வாழ்வு_தூக்கு_கயிற்றை_அண்மித்திருக்கிறது

#பெண்களுக்காக,,,,,,,,
     #ஒரு_ஆணை_நம்பி_தன்_அந்தரங்கங்களை_காட்டிய_ஒரு_பெண்ணின்_வாழ்வு_தூக்கு_கயிற்றை_அண்மித்திருக்கிறது

(கட்டாயம் படிக்க வேண்டிய  அவசர அறை கூவல்)

என் சக #தோழிகளே!
உங்களுக்கு #அறிவுரை கூறும் தகுதி இன்று என்னிடம் இல்லை 
இதோ சாகும் முன் நான் சொல்லி விட்டு போகிறேன்

கேடு கெட்ட இந்த முகவலையில்
நல்லவன் போல் ஒருவன் வந்தான்
ஆரம்பமே ஹாய்!சகோதரி என்றான்

நாங்கள் எல்லா ஆண்களையும் போல் இல்லை பேசுங்கள் என்றான்
கண்ணியமானவன் என்று மூன்று பொழுதும் வணக்கங்கள் சொல்வேன்

அன்பை விதைத்தவன்
காதலில் வீழ்த்தினான்

என்னை பற்றியே அடிக்கடி மூச்சு விடுவான்
தன் பெயரையும் என் பெயரையும் எழுதி வைத்திருக்கிறான்

நீதானடி என் உயிர் என்றல்லாம் மனம் இரங்கும் வார்த்தைகள் பேசுவான்

தூரத்தில் இருப்பவன்
என்னை காதலிக்கும் கணவன்
ஐயோ!என்னை அனுபவிக்க துடிக்கிறானே

அவன் பாவம்
அவன் ஆசைகளை கட்டுப்படுத்த என்ன செய்வேன்?

செய்யாத தப்பை முதன் முதலாக அவனை நம்பி அடியெடுத்து வைத்தேன்

அங்கம் அங்கமாய் காட்டி அவன் ஆசையை தீர்ப்பேன்
உணர்ச்சி வரும் போதெல்லாம் காட்டடி என்பான்

போடா அம்மா இருக்கிறா என்றால்
அம்மா வேணுமா? நான் வேணுமா? என்று உருகுவான்

இல்லை காட்டடி நீ என்று நிற்பான்

மலசலகூடம் போய்,
காட்டு பற்றைக்குள், மறைந்து அங்கம் அங்கமாய் காட்டி பிசைந்து ஆசையை அடக்கினேன்

காதலன் தானே
நாளை என் கணவன்தானே என்று
கண்டபடியெல்லாம் கற்பனை செய்தேன்

கடவுளே!
நான் பாவி

கடைசியில்த்தானே தெரிந்தது 
அவன் படு பாவியென்று

என்னைப் போல் எத்தனையோ பெண்களை அனுபவித்திருக்கிறான்

என்னைப் போன்று எத்தனையோ பெண்களின் அங்கங்களை பார்த்து தன் ஆசைகளை அடக்கியிருக்கிறான்

எனக்கு சொன்ன அதே வார்த்தைதான்
அவர்களுக்கும் சொல்லியிருக்கிறான்
நீ எனக்கு உயிரடி

நம்பிக்கையோடு என் உடலையே திறந்து காட்டும் போது படுபாவி ஒவ்வொரு அசைவையும் படம் எடுத்து வைத்திருக்கிறான்

நாலு பேருக்கு காட்டுறானாம்
எப்படி இவள் வேசையென்று?

என் தோழன் ஒருவன் நான் அம்மணமாய் நின்றதை அனுப்பினான்

எவ்வளவு நம்பினேன்?
பொறுக்கி ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்திருக்கிறானே

என் சக தோழிகளே!

என் அம்மா அப்பாவின் மானத்தை பறித்தெடுத்த நான் இந்த உலகில் இனி வாழ்ந்து பயனில்லை

சாகும் முன் இறுதியாக சொல்லி விட்டு போகிறேன்
யாரையும்  நம்பி உங்கள் அந்தரங்கங்களை விற்று விடாதீர்கள்

படுபாவிகள் ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்து நாலு பேருக்கு காட்டி மகிழ்கிறார்கள்

உண்மையாக காதலிப்பவனாக இருந்தாலும் காட்டி விடாதீர்கள்

நான் போகிறேன்
எப்படியும் இன்னும் சில நிமிடத்தில் இறந்து விடுவேன்

முகப்பெல்லாம் என் அந்தரங்கம்
தீயாய் பரவுகிறது

அம்மா அப்பா தற்கொலை செய்யும் முன்
பாவம்  பண்ணாத அவர்களை வாழ விட்டு நான் போகிறேன்

அடேய் படு பாவி
நம்பித்தானையடா இருந்தேன்

பெண்களே!
இதோ!தூங்க போகிறேன்
இறுதியாக ஒரு வார்த்தை

இன்று எனக்கு
நாளை உங்களுக்கு

நாசமாய் போவீர்கள்
என் சக பெண்களே!
உங்களுக்காய் மன்றாடுங்கள்

Post a Comment

0 Comments