HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

உண் முதல் உண்ணி வரை தமிழின் சிறப்பு.

♥உண் முதல் உண்ணி வரை தமிழின் சிறப்பு.

♥ஊன், ஊண்: இந்த இரு சொற்களுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரே ஒரு எழுத்துதான் வித்தியாசம், ஆனால், இவற்றின் பொருள் முற்றிலும் மாறுபட்டது.
'ஊன்' என்றால், மாமிசம், இறைச்சி என்று பொருள். 'ஊண்' என்றால், உணவு என்று பொருள்.
மாமிசமும் ஓர் உணவுதான்; அதற்காக ஊனை, ஊண் என்று எழுதக்கூடாது.
ஒருவர் பசியோடு இருக்கிறார். அவர் முன்னே தட்டில் உணவை வைத்து, 'உண்' என்கிறோம், அதாவது, 'சாப்பிடு' என்கிறோம்.

♥அந்த 'உண்' என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான், உணவு வந்தது. ஊண் என்பதும், அதிலிருந்து வந்ததுதான்.
'ஊண் மிக விரும்பு' என்பார் பாரதியார். அதாவது, வேளாவேளைக்கு உணவை விரும்பி உண்ண வேண்டும்; பட்டினி கிடந்தாலோ, சரியாகச் சாப்பிடாவிட்டாலோ, குப்பை உணவுகளை உண்டாலோ சுறுசுறுப்பாக இயங்க இயலாது.

♥பாரதியார் 'மிக ஊண் விரும்பு' என்று சொல்லவில்லை. அதாவது, உணவை அளவுக்கதிகமாகவும் உண்டுவிடக்கூடாது. அளவறிந்து உண்ண வேண்டும்.
'உண்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்த இன்னோர் அழகிய சொல், 'உண்டி'. இதன் பொருளும் உணவுதான்.
'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்' என்று பழமொழி உண்டு. அதாவது, பசியோடு உள்ள நேரத்தில், நமக்கு உணவு தந்தவர்களை மறக்கக்கூடாது. அவர்கள் நமக்கு உயிரையே தந்தவர்களாகப் போற்றவேண்டும்.

♥இந்த 'உண்டி'யிலிருந்து 'சிற்றுண்டி' என்ற சொல் வந்தது: சிறு + உண்டி => சிற்றுண்டி. மிகுதியாகச் சாப்பிடாமல், கொஞ்சம்போல் கொறிக்கும் உணவு.
இதற்கு எதிர்ப்பதம், பேருண்டி: பெரு + உண்டி: ஒரே நேரத்தில் ஐம்பது வகை உணவுகளைத் தட்டில் நிரப்பிக்கொண்டு உண்ணும் விருந்து.

♥ஒரு குறிப்பிட்ட உணவை உண்கிறவர்களை, 'உண்ணி' என்பார்கள். இதன் அடிப்படையில் மிருகங்களை மூன்று வகையாகப் பிரிப்பார்கள்:
தாவர உண்ணி => தாவரங்களை உண்டு உயிர் வாழ்பவை
விலங்குண்ணி => விலங்கு உண்ணி: பிற விலங்குகளை உண்பவை
அனைத்துண்ணி => அனைத்து உண்ணி: தாவரங்கள், விலங்குகள் ஆகிய இரண்டையும் உண்பவை.
- என். சொக்கன்

Post a Comment

0 Comments