♥சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் ஆனால் ,
உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச்
சொல்வது ....?
♥சொட்டும் நீர் உறிஞ்சா பாலிஸ்டர்
துணியாக , இருந்தாலும் அதில் தலை துவட்டவே ஆசை...
#அவளின் முந்தானை.!
♥ஒரு முத்தமிட்டு மன்னிப்புக் கேட்டேன்,
அன்று முதல் என்னைக்
கோபப்படுத்துவதையே வேலையாய்
கொண்டிருக்கிறாள்..!!!
♥காதுகள் கூட சுவை உணருமா??...
choo sweet என்று அவள் சொன்னது, காதின் வழிச்சென்று ரத்தத்தில்
சர்க்கரையை ஏற்றுகிறது.!
♥அவள் துணி காய போட வருவதை பார்த்து கொடியை சற்று உயர்த்திக்
கட்டிவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தேன்... துணிகளை என்னிடம்
கொடுத்துவிட்டு புன்னகையோடு நகர்ந்தாள்..!
♥அதிகம் பேசிவிட்ட களைப்பில்
ஓய்வெடுக்கிறது அவளின் விழிகள்..
#உறக்கம்
♥கணவன் மனைவி உறவின்
ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக
அனுபவித்து வாழுங்கள்....
அன்பு பெருகும்..!!
0 Comments
Thank you