HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அப்பா மகள்

♥அப்பா மகள் 

♥அம்மா எவ்ளோ திட்டினாலும் 
இந்த மனசு அத லேசா எடுத்துக்கும்..
அப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டாருனா
அவ்ளோ தான்.. மனசுல பாரம் நிரம்பி போகும்...கண்ணுல கண்ணீர் தேங்கி போகும்...இது தான் அப்பாக்களுக்கே உரிய சிறப்பு !

♥உனக்கு இது செஞ்சேன் அது செஞ்சேன்..
உன்ன இப்படி வளர்த்தேன்.. அப்படி வளர்த்தேன்..  என்று அம்மா அடிக்கடி கூறும் போது.கலங்காத நம்ம மனசு...அப்பா ஒரே ஒரு தடவ  கண்கள் சுருக்கி நம்மள பாத்துட்டார்னா..  அதுல தான் எவ்ளோ அர்த்தம்.. கரைஞ்சு போகுது இந்த மனசு..

♥அவ்ளோ ருசியா சமைச்சு போடுவா அம்மா.. நம்மள ரசிச்சு ரசிச்சு கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவா அம்மா..
ஒரே ஒரு முறை தலையை வருடி செல்லும் அப்பாவின் கைக்கும் மட்டும் ஒரு மகிமை..
அந்த ஒரு வருடலில் காணாமல் போகும் வலி..

♥எதுவும் சொல்லவே மாட்டார்..
சில நேரம் கத்தவும் செய்வார்..
புகழ்ந்து பேச காசு கேப்பாரு..
நாம இல்லாத போது 
என் மகளுக்கு ஈடு இணை ஏது.. 
என் மகனுக்கு ஈடு இணை எது.. 
என்று பெருமை பேசும் அப்பாவின் முன்னே 
பறந்தே போகுது இந்த செல்ல கோபங்கள்..

♥நமக்கு அழகழகாய் ஆடை அணிய செய்து 
அழகு பார்க்கும் அப்பாக்கள்..
தனக்கென்ன விலை உயர்ந்த ஆடைகளை எடுப்பதே இல்லை..
அதே சமயம் நாம் ஆசையாக வாங்கி கொடுத்தால்..
அவரின் முகத்தில் வந்து விடும் 
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..
பிள்ளைகளின் பரிசை பொக்கிஷமாக 
பாதுகாக்கும் அப்பாக்கள்..

♥பூமியில் பிறந்த அனைவருக்கும் 
இதயத்தை படைத்த இறைவன்..
அப்பாக்களுக்கு மட்டும் கனவுகள் படைத்தான்..
அதில் தன் பிள்ளைகளின் 
எதிர்காலத்தை மட்டுமே 
அழுத்தமாய் பதித்தான்..

♥அப்பாவின் விழியோரம் நீர்த்துளிகள்..
பிள்ளைகளுக்காவே..
ஆனந்த கண்ணீராக.. 

♥காலங்கள் ஓடி விடும்..
வருடங்கள் ஓடி விடும்..
பிஞ்சு விரல் பிடித்து..
தோள் மீது நம்மை சுமந்து..
தன் காயங்கள் மறைத்து..
நம் முன்னே என்றும் சிரித்து..
நம் வளர்ச்சியை பார்த்து பார்த்து 
நிறைவு கொள்ளும் அப்பாக்களின் 
அன்பு மட்டும் என்றென்றும் மாறுவதில்லை..

Post a Comment

0 Comments