HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் முதல் நாள் ஒரு சிறிய தகராறு.

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR

♥கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் முதல் நாள் ஒரு சிறிய தகராறு.  இதனால் ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.
மறு நாள் கணவன் தொழில் விசயமாக வெளிஊருக்கு அதிகாலை 4 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.

♥மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.
அதிகாலை 4 மணிக்கு புறப்படவேண்டும் என்னை எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் அருகே வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடுவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.

♥காலையில் திடுக்கிட்டு எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 6. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.

♥மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன் அருகில்  ஒரு தாளில் மனைவி எழுதி வைத்திருந்தாள் ” மணி 4 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!

♥இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார்.

♥முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பிவிட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது.

♥இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டுஇருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

♥மனைவி என்பவள்
உன்னில் ஒரு பாதி
உன் உயிரில் ஒரு பாதி
உன் உடலில் ஒரு பாதி
அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோ வை மறக்க பழகுங்கள்.


♥இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான்

Post a Comment

0 Comments