HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நேர்மறை... எதிர்மறை எண்ணம்...!

♥நேர்மறை... எதிர்மறை எண்ணம்...!!

♥ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதை பழக்கம் உள்ளவன். எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை மிரட்டி பணம் வாங்கி குடித்துக்கொண்டே இருப்பான். பிறருக்கு தொல்லை கொடுத்து இன்பம் பெறுவான். 

♥மற்றவன் நல்லவனாக, சமூகத்தில் மதிக்கப்படுபவனாக, நல்ல குடும்ப தலைவனாக இருந்தான். 

♥அருமையாக குடும்பத்தை பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. ஒரே தகப்பனுக்கு பிறந்து, ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இரு குழந்தைகளில் ஒன்று ஊர் போற்றும் நல்லவனாகவும், மற்றொன்று ஊர் தூற்றும் கொடியவனாகவும் இருக்க காரணம் என்ன? என்று.

♥ஒரு பெரியவர் குடிகார மகனையும், நல்ல குடும்ப தலைவனையும் இப்படி கேட்டார். உன் நடத்தைக்கு யார் காரணம்? என்று... இருவரும் ஒரே பதிலைதான் கூறினார்கள். என்னுடைய நடத்தைக்கு காரணம் என் அப்பா என்று. 

♥உன் அப்பா என்ன செய்தார்? என்று குடிகார மகனை கேட்டபோது எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து என் அப்பா இரவிலும், பகலிலும் குடித்துக்கொண்டே இருப்பார். குடும்பத்தினரை தொந்தரவு செய்துக்கொண்டே இருப்பார்

♥அடிகளுக்கு பஞ்சமில்லை... அவரின் மகனாகிய நான் வேறு எப்படி இருப்பேன்? அதனாலேயே நானும் குடிகாரனாகி விட்டேன். மோசமான தகப்பனின் மகனான நான் மோசமாகி விட்டேன். என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம் என்றான். 

♥பின்னர் உன் அப்பா என்ன செய்தார்? என்று நல்ல மகனாக இருப்பவனை கேட்டார். அதற்கு அவன் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே என் தந்தை இரவிலும், பகலிலும் குடித்துக்கொண்டே இருப்பார். 

♥குடும்பத்தினரை தொந்தரவு செய்துக்கொண்டே இருப்பார். அடிகளுக்கு பஞ்சமில்லை... அதனாலேயே நான் குடிக்கக்கூடாது. 

♥குடிகாரனாகி விடக்கூடாது. மோசமான தகப்பனின் மகனான நான் மோசக்காரனாக இருக்காமல் நல்லவனாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால் என் நடத்தைக்கு என் தந்தையே முழுக்காரணம் என்றான். 

♥நீதி :
எந்த ஒருவரின் நடத்தையிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை நிகழ்வுகளும் உண்டு... நாம் அதில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் தான் நமது செயல் உள்ளது

Post a Comment

0 Comments