HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனைவியை_நேசியுங்கள் இருக்கும் பொழுதே...

#மனைவியை_நேசியுங்கள் 
இருக்கும் பொழுதே...

ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்!!!

எழுபத்தைந்து வயதில்.....
ஆதரவு இன்றி நிக்குது மனசு...

நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....

என் 
கோபத்தை தள்ளுபடி செய்து
ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....

அவள் சமையலை
ஒருமுறையாவது நான்
மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்..
ஒரு நாளாவது நான் சமையல் செய்து 
அவளுக்கு ஊட்டி இருக்கலாம்..

ஒரு நாளாவது
அவளுக்கு பதில் - நான்
அவளது துணியையும் சேர்த்து
துவைத்து இருக்கலாம்..

ஒரு நாளாவது
TV யையும், Mobil லையும் அணைத்துவிட்டு,
அவளை கொஞ்சி இருக்கலாம்..

ஒரு நாளாவது
வேலை தளத்தின் 
கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே 
விட்டு விட்டு வந்து இருக்கலாம்...

ஒரு நாளாவது- என் 
விடுமுறை நாட்களில் - அவளை
சினிமாவுக்கு அழைத்து 
சென்று இருக்கலாம்..

ஊர் ஊராய் சுற்றி அவளை
உற்சாகப்படுத்தி
இருக்கலாம்...

அவள் விரும்பி 
கேட்காத போதும் - ஒரு புடவை
வாங்கி கொடுத்து 
இருக்கலாம்.

ஒரு மாசமாவது− என் 
முழு சம்பளப் பணத்தை 
அவளிடமே கொடுத்து 
இருக்கலாம்....

ஒரு நாளாவது
காலையில் அலாரத்தை 
கொஞ்சம் அணைத்து வைத்து
அவளை தூங்க விட்டு இருக்கலாம்...

நீ சாப்பிட்டியா என்று அவளை
ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...

நீயும் வா 
என்னுடன் வந்து சாப்பிடு
என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்..

அவள் 
உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது
விசாரித்து இருக்கலாம்...

அவள்
தன்னை கவனிப்பதை விடுத்து
பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை
கவனித்து இருக்கலாம்..

அவள்
நோயில் விழுந்த போது
நான் கடன் பட்டேனும் அவளை
காப்பாற்றி இருக்கலாம்...

என் 
தாயே! 
தாரமே ! − நீ
என்னுடன் இருந்த போது
நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...

நீ 
என்னை விட்டு போனதும்
நான் பலமுறை கால் தடுக்கி
விழுகிறேன்...

என்னை 
தூக்கி விடவும் 
மூத்தவனுக்கு நேரம் இல்லை...

தேனீர் ஏதாவது
போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கும்
சினம் வருது...

என் மனைவியே 
உன்னை நான் தினமும் 
கொண்டாடி இருக்க வேண்டும் ...

நான் தவறுகள் இழைத்ததற்கு 
என்னை நீ மன்னித்து விடு...

ஒரு முழப் பூவாவது 
ஒரு நாளாவது
உனக்கு வாங்கி தராதவன் 
நான்...

மூச்சு இழந்த - உன் 
புகைப்படத்துக்கு தினம் தினம் மாலை இட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
மனைவியே! 
என்னை மன்னித்து விடு..

மீண்டும்
ஒரு பிறப்பு இருக்கும் என்றால்
நீயே என் மனைவியாய் வந்து விடு.
நான் உன்னை கொண்டாட வேண்டும்..

எழுபத்தைந்து வயதில்.....
இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க.... 

#உங்கள்_மனைவியை_நேசியுங்கள்!!

Post a Comment

0 Comments