HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

இரவு நேரம் வீட்டுக்கு வந்த சங்கரன் – மூத்த மருமகள் சப்பாத்தி சாப்பிடுவதையும், இளைய மருமகள் பழைய கஞ்சி சாப்பிடுவதையும் கண்டார்.

♥இரவு நேரம் வீட்டுக்கு வந்த சங்கரன் – மூத்த மருமகள் சப்பாத்தி சாப்பிடுவதையும், இளைய மருமகள் பழைய கஞ்சி சாப்பிடுவதையும் கண்டார்.

♥தன் மனைவி கமலாவை அழைத்து, “மூத்த மருமகள் சீர் வரிசை, நகை, வரதட்சணையோட வந்ததால அவளுக்கு சப்பாத்தியும் இளைய மருமகள் காதல் கல்யாணம் பண்ணி வெறும்
கையோட வந்ததால அவளுக்கு பழைய கஞ்சியும் கொடுக்கறியே! இது நியாயமா?’ என்று கேட்டார்.

♥மாமனாரின் பேச்சை கேட்ட இளைய மருமகள், “இல்லை மாமா, நான்தான் வெயில் காலத்துல கஞ்சி குடிச்சா உடம்புக்கு நல்லது, தூக்கம் நல்லா வரும்னு விரும்பி சாப்பிடறேன். அத்தை மேல எந்த குத்தமும் இல்லை’ என்றாள்.

♥சங்கரன் அங்கிருந்து சென்றதும் கமலா, இளைய மருமகள் கையைப் பிடிச்சு “என்னை மன்னிச்சுடும்மா, நான் தப்பு செய்தும் என்னைக் காட்டிக் கொடுக்காமல் உன் மாமனார்கிட்டே இருந்து என்னைக் காப்பாத்திட்டே.
நீ சீர் செனத்தியோட வரலேன்னாலும் நல்ல குணத்தோட வந்திருக்கே; அதுவே போதும்’ என்று நா தழுதழுக்க இளைய மருமகளைப் பாராட்டினாள்.

Post a Comment

0 Comments