HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

இதயம் #கனத்த #இரவு

#இதயம் #கனத்த #இரவு

வேலைமுடிந்து 
வீடு வருகின்றேன்
மாலை மயங்கிறது.
மங்கிறது பார்வை.

இலைகள் 
பழுத்து விழுந்து 
படர்ந்திருக்கின்றது 
வீதியின் இரு மருங்கிலும்...

பொலித்தீன் பையில் சிறு 
பொட்டளம் ஒன்று..

வெற்றுப்பையென்று யாரும்  வீசியிருக்கலாம்

யூசி வாகனம் வருவது குறைய அதனால்
ஓசியில் இங்குதான் கொட்டுவது நிறைய

வேண்டாத காகிதமென்று திரட்டி யாரும் இவ்
வீதியில் போட்டிருக்கலாம்.

எப்படி இருந்தால் எனக்கென்ன என்று எடுத்து பார்த்தேன்

பத்திரிகைச்சரையில் 
பலதடவை சுற்றிய பணம்

எண்ணிப்பார்த்தேன் 
எண்ணாயிரம் ரூபா..

கொத்து ரொட்டியும் கோக் கும் வாங்கி 
குதூகலிக்கலாமா? அல்ல
சொத்தாக எண்ணி வங்கியில் வைப்பிலிடவா? என்று விவாதித்தது மூளை

தொலைத்தவன் எவ்வளவு துன்பப்படுவானோ?
எது என்றாலும் 
இரண்டு நாளாவது பார் என்றது மனது

மூளைக்கும் மனதுக்கும் 
மும்முனை யுத்தம்
மனம் சொன்னதை கேட்பதாய் 
மவுனித்தது மூளை

குளித்து கழுவி கும்பிட்டு விட்டு
கடைக்கு போக கால் நடையாய் புறப்பட்டேன்

அடர்ந்த முன்னிருட்டு அதில்
ஆரோ ஒரு பெண்
மின்கல வெளிச்சத்தில் 
வெதும்பிய படி..

என்ன என்றேன்
ஐயோ தம்பி! 
பிள்ளைக்கு வருத்தம் வோட்டில
பென்ரனை அடைவு வைச்ச காச 
பேசில வைச்சனான்- இடையில 
பிறிட்டோன் சிறப்பும் வாங்கினான்.

வந்து பார்த்தேன் காணல என்றார்
வாயடைத்து நின்றேன்.

எவ்வளவம்மா என்றேன் 
எண்ணாயிரத்தில் 
இந்த மருந்து போக மீதி என்றாள்
எண்ணிப்பாருங்கள் சரியா? என்று என்றேன்

சாகலாம் என்றிருந்தேன் 
சாமி போல வந்தாய் தம்பி
ஆயுள் நூறு வாழனும் என்றாள்..

இதயம் கனத்த 
இரவானது அன்று...

Post a Comment

0 Comments