HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பிறந்த வீடா?, புகுந்த வீடா ?

பிறந்த வீடா?, 
புகுந்த வீடா ?
என்று கேட்டால், 
இரண்டுமே 
தனக்குச் சொந்தமில்லை என்றுதான் பெண்களில் பலருக்கும் சொல்லத் தோன்றும்.

 திருமணமான ஒவ்வொரு பெண்ணும் இதை உணர்ந்து கடந்து வந்திருப்பார்

.திருமணமாகிவிட்ட பிறகு தாய் வீட்டுக்குச் சென்றால், அதுவும் சகோதரர்களுக்குத் திருமணமான பிறகு சென்றால் போதும். 

அவ்வளவு காலம் நாம் விளையாடிய,
 ஆண்டு பழகிய வீட்டில் எதையும் உரிமையோடு எடுத்து ஆள முடியாது.

 ஒரு தர்மசங்கடத்துடனே எடுக்க வேண்டி இருக்கும். இல்லையென்றால் உரியவர்களிடம்
 (நாம் உரியவர்கள் என்ற பதவியை இழந்துவிடுகிறோம்)
 கேட்டு எடுக்க வேண்டி இருக்கும். 

நாம் அங்கே விருந்தாளி மட்டுமே. 
அதாவது
 சொந்த நாட்டிலேயே அகதிகள்போல.

வாடகை வீடு தேடும் இடங்களில், 
“இந்த வீட்டை வாடகைக்குத் தரும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறதா?"
” என அந்த வீட்டுக்காரப் பெண்களிடம்   கேள்வி, கேட்டால்.    
  பல
 வீடுகளில் , இல்லை என்று தான் பதில் வரும்.

 பெண்களின் நிலை என்ன என்பதையும்
 போலி அதிகாரம் மட்டும் தான் நமக்கு சொந்தம்
 என்ற நிதர்சனத்தையும் 
நாம் உணர்ந்து தான் இருக்கிறோம்.

.‘ஏன் நமக்கே நமக்கென்று
 ஒரு வீடு இல்லை?’ என்ற கேள்வியின் நாயகிதான்
 பெண்

பெண்களுக்கு.  
 பிறந்த வீடு 
தனக்குச் சொந்தமில்லாமல் போகிறது, 

சின்ன சின்ன கோபத்தின் போதுகூட ‘
"இது என் வீடு’ 
எனக் குத்திக் காட்டிப் 
பேசக் கூடிய
 கணவனால், 
புகுந்த வீடும்
 தனக்கு சொந்தமில்லை என்று   உணர்ந்து கொள்கிறாள்.

  அளவில் சிறியதாக இருந்த போதிலும் ‘இது என் வீடு; எனக்கே எனக்கான வீடு’
 என்று ஒரு வீடு
எல்லா 
பெண்களின் கனவு.
உண்மை தானே??????

Post a Comment

0 Comments