HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கணவரை இழந்த பெண் ஒருவர் கண்ணீருடன் சொன்னது

கணவரை இழந்த பெண் ஒருவர் கண்ணீருடன் சொன்னது. 😢

என்னை சுப காரியங்களுக்கு பத்திரிகை வைத்து அழைக்கும்போதேல்லாம், வெறும் பத்திரிகையை நீட்டி “வந்துடுங்க “என்று சொல்வார்கள்.
இதே என் பக்கத்திலிருக்கும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலைபாக்கு, பழம், பூ, மஞ்சள் குங்குமம் என்று வரிசையுடன் வைத்து அழைப்பார்கள். பக்கத்திலே உட்கார்ந்திருக்கும் என் முறை வரும்போது, மஞ்சப்பைக்குள்ளே துழாவி வெறும் பத்திரிகை மட்டும் கொடுப்பார்கள். அவர்கள் கையில் மஞ்சள் குங்குமம் தட்டுப்பட்டாலும், அதனை கொடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் கைகள் பைக்கு உள்ளே போய் போய் வெளியே வரும்போதெல்லாம் எனக்கு வேதனை மனதை
பிசையும். கடைசியில் அவர்கள் கைகளே ஒரு முடிவுக்கு வந்து, வெறும் பத்திரிகையை நீட்டும்.
ஏன் அம்மா! அந்த பத்திரிகையுடன் பூ, வெற்றிலை பாக்கு பழம் கொடுத்தால் நான் என்ன தலையில் சூடவா போகிறேன்? நேரே கொண்டு போய் சாமி படத்திற்கு முன்னாடி வைக்க போகிறேன்! கணவர் இல்லாததால் அவரை நினைத்து வாழும் எனக்கு ஒரு சாதாரண மரியாதையை கூட கொடுக்க மறுப்பது ஏன்? என்று வருத்தத்துடன் கூறினார் .
எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை!

அவர்கள் வார்த்தையில் நியாயம் இருந்தால் உங்கள் கமெண்ட் ‘எஸ்’ என்று கொடுத்து இவரை போன்ற பெண்களுக்கு ஆறுதலை தருவோம்

Post a Comment

0 Comments