HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

திருமணம் நடந்து சிலமணி நேரத்தில் கணவன் மனைவி....

♥திருமணம் நடந்து சிலமணி நேரத்தில் கணவன் மனைவி.......

♥மனைவி :! உங்க கூட நான் இனி வாழ போறேன் காலம்  எல்லாம்  நான் உங்களை பாத்துக்கனும்... நீங்க என்னை  எப்படி பாத்துக்குவீங்க

♥கணவன்::! உன்னை என்னால் முடிந்தவரை சந்தோசமாக பாத்துக்குவேன்
உன் கண்ணுல என்மூலமா கண்ணீர் வர விடமாட்டேன். எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்

♥உனக்கு தேவையான  எல்லாம் வாங்கி தருவேன்.. உன் தேவை என்ன என்பதை அறிந்து நடப்பேன்.. நீ ஆசைப்படுவதை வாங்கி தருவேன்..

♥உனக்கு நல்ல விதமான மரியாைதை தருவேன்.. உன் பிறந்த வீடு போல் இங்கும் மகிழ்ச்சியாக மரியாதையாக வைத்திருப்பேன்... சரிசமமாக நடத்துவேன்...
உன்னை கஷ்டபடுத்தமாட்டேன்
சரியா....!

♥மனைவி::! இல்ல இல்ல... இது  தப்பு ......இதுல வர்ற மாதிரிஎல்லாம் என்னை நீங்க பார்க்கவேண்டாம்.......?? பார்க்கவும் முடியாது... அதுதான் உண்மை
ஒருத்தர வாழ்க்கையில  எப்பவுமே சந்தோசமா பாத்துக்க கண்டிப்பா முடியாது
இது பொய் அப்படினு உங்களுக்கே தெரியும்
அப்புறம் எனக்காக  ஏன்.... இப்படி பொய்...!!

♥கண்ணீர் வர விடமா பாத்துக்கறத விட 
நீங்க என்னை மனசு பாதிக்கபடமா பாத்துக்கிட்டாலே போதும்...  கண்ணீருக்கும் கவலைக்கும் இடமே இல்ல.....! ஏன்னா மனசு பாதிக்கப்பட்டா.. அப்புறம் சரிப்படுத்த முடியாது...

♥எனக்கு  எல்லாம் வாங்கி தர வேண்டாம்
நமக்கு தேவையானத மட்டும் வாங்கி குடுத்தா போதும். இனி எனக்கென்று தேவை குறைவு நமக்கான தேவை தான் அதிகம். 

♥ஒரு குடும்பத்துல  வர்ற முதல் பிரச்சனை
ஆடம்பரமான பொருள் வாங்கி
கடன்ல சிக்குறது தான்..
அது என்னால உங்களுக்கு எப்பவுமே வேண்டாம்....! விரலுக்கு ஏத்த மாதிரி வாழ்வோம்.... நீங்க கடன் காரர் ஆகி உங்க நின்மதி போய் அதால என் நின்மதியும் போய்..குடும்பமே நின்மதி இன்றி போய்விடும்.

♥எனக்கான  மரியாதை  என்னை மதிக்கறதுல இல்லங்க
மத்தவங்ககிட்ட என்னை நீங்க விட்டுகொடுக்காம இருந்தாலே போதும்....! எனக்கான மரியாதை என் நடத்தையிலும் இருக்கு அதை நான் சரியா செய்வேன்.

♥வாழ்க்கையில கஷ்டம் அப்படிங்குறத தெரிஞ்சாத்தான் அதுல வர்ற சந்தோசம் அழகாதெரியும்....!

♥நான்  சரியா  பேசி நடந்தா என் கைபிடிச்சு
கூடவே வாங்க ...தவறா  பேசி நடந்தா  இது தப்பு அப்படினு சரியா புரிய வைங்க. என் வாழ்க்கை துணை நீங்க... நீங்கதான் எனக்கு துணை.

♥மனைவி ஆகிய நான் உங்களுக்கான இந்த சமுதாயத்துல ஒரு அடையாளம்
அதை சரியா பாத்துக்கறது என்பது
அவள் சரி தவறுகளே  மனசு காயப்படாம
எடுத்து சரி பண்றதுதான்
இது உங்களுக்கு மட்டும் இல்ல
எனக்கும்தான்......!!!

♥கணவன் மனைவி உறவு
காமம்  சந்தோசம்  அதை தாண்டி  அவங்களுகுள்ள விட்டுதரனும் ஆனா   மத்தவங்ககிட்ட விட்டுதரவே கூடாது
இது..அவங்களுக்கான உலகம்.....!

♥கணவன்::!  இனி இந்த உலகத்துல
 நீ என்ன எதிர்பார்க்குறியோ
அதுஎப்பவுமே  உனக்கு கிடைக்கும்
என் மனசாரா..........! நீ எனக்கு கிடைத்தது வரமே.........

Post a Comment

0 Comments