HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

காதலர் தின வரலாறு

♥காதலர் தின வரலாறு

♥கி.பி.207 ஆம் ஆண்டில் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளா­டியஸ் மன்னன், தனது படை­வீ­ரர்­க­ளுக்கு முட்டாள் தன­மாக உத்­த­ரவு ஒன்றை பிறப்­பிப்­பானாம்.
இந்த அர­சனின் நட­வ­டிக்­கையால் படையில் சேர பலர் தயங்­கினர். 

♥போர் வீரர்கள் பிரம்­மச்­சா­ரி­க­ளாக இருந்தால் சல­னங்கள் எதுவும் இல்­லாமல் முழு ஆவே­சத்­துடன் போர் புரி­வார்கள் என அவர் கரு­தினான்.
திடீ­ரென ஒருநாள் ‘ரோமா­புரி நாட்டில் இனி எவ­ருமே திரு­மணம் செய்து கொள்ளக்­கூ­டாது, படையில் சேரும் இளை­ஞர்­க­ளுக்கு ‘திரு­மணம் ஆகி­யிருக்கக் கூடாது காத­லிக்­கக்­கூ­டாது என சட்­ட­மி­யற்­றினான்.
இதை மீறு­ப­வர்கள் கைது செய்­யப்­பட்டு இருட்டுச் சிறையில் அடைக்­கப்­ப­டு­வார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்­டித்து கொல்­லப்­ப­டு­வார்கள்’’ என உத்­த­ர­வி­டு­மாறு தனது அமைச்­சருக்கு அறி­வித்தான்.

♥திரு­ம­ண­மா­ன­வர்கள் மனை­வியை பிரிந்து வரத் தயங்­கு­கி­றார்கள். காதலிக்கும் இளை­ஞர்கள் காதலியை பிரிந்து வர தயங்­கு­கின்­றனர். இவை இரண்டும் இல்­லா­விட்டால் படையில் சேர்­வார்கள் என்று இரண்டாம் கிளா­டியஸ் மன்னன் எண்ணினான். மன்­னனின் அறி­விப்பைக் கேட்ட ரோமா­னி­யர்கள் அதிர்ச்­சி­யடைந்­தனர்.

இந்­நி­லையில், புனித
பாதி­ரியார் வலன்டைன் என்பவர் அர­சனின் இந்த அறி­விப்பை மீறி காதல் ஜோடி­க­ளுக்கு இர­க­சி­ய­மாகத் திரு­மணங்­களை நடத்தி வைத்தார்.
இதை­ய­றிந்த மன்னன் பாதிரியார் வலன்­டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்ற நாளும் நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

♥இடைப்­பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதி­ரியார் வலன்டைன், அச்­சி­றையின் தலைமைக் காவலர் அஸ்டோ­ரி­யஸின் பார்வை இழந்த மகள் ஜூலி­யாவை குணப்­ப­டுத்­தினார்.
இதை அறிந்த மன்னன் சிறைத் துறைத் தலைவனை வீட்டுச் சிறையில் வைத்தான். 

ஆனாலும் வலன்­டைனை விடு­விக்க அஸ்­டோ­ரியஸின் மகள்  முயன்றாள்.
இதை­யெல்லாம் கேள்­விப்­பட்ட மன்­னன் கிளா­டியஸ் கோபம் கொண்டு பாதிரியார் வலன்­டைனின் தலையைச் சீவும்­படி ஆணை­யிட்டான்.

♥கி.பி.207 பெப்­ர­வரி 14 ஆம் திகதி தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது. அவர் நினை­வாகக் கொண்­டா­டப்­ப­டு­வ­துதான் ‘வலன்டைன்ஸ் டே (Valentine’s Day) எனும் காதலர் தினம்

Post a Comment

0 Comments