HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒருவர் புதிதாக ஒரு வீடு கட்டினார்.

ஒருவர் புதிதாக ஒரு வீடு கட்டினார்.வீட்டுக் கதவு ஜன்னல் செய்ய பலகைக்கு வீட்டின் முன் நிற்கும் பெரிய வேப்ப மரத்தை வெட்ட முடிவு செய்தார். அந்த மரத்தில் ஒரு காகம் கூடுகட்டி குஞ்சுகளோடு வாழ்ந்து வந்தது.

மரத்தருகே அப்பாவும் மகனும் வந்தனர்."கதவு ஜன்னலுக்கு இந்த மரத்தைத் தான் வெட்ட போகிறோம்" என்றார் அப்பா. "யாரப்பா வெட்டுவார்கள்?"என்று மகன் கேட்டான்.
"நம் உறவுக்காரர்களை வரச் சொல்லி இருக்கிறேன்" என்றார் அப்பா.

காக்கைக் குஞ்சுகள் பயந்தன. தாய்க்காகமோ எந்தவித பதற்றமும் காட்டவில்லை. அடுத்தநாள் உறவுக்காரர்கள் யாரும் வரவில்லை. மகன் அப்பாவிடம் கேட்டான்"ஏனப்பா யாரும் வரவில்லை?"
"உறவுக்காரர்கள் ஏமாற்றிவிட்டார்கள். நாளை நண்பர்களை வரச் சொல்லியிருக்கிறேன்" என்றார் அப்பா.
அப்போதும் தாய்க்குப் பதறவில்லை.

"ஏனப்பா உங்கள் நண்பர்களும் ஏமாற்றிவிட்டார்கள். இன்றும் யாரும் வரவில்லை"என்று மகன் கேட்டான். அப்பா சொன்னார் "நாளை நாமே மரத்தை வெட்டி விடுவோம்"

காக்கைக் குஞ்சுகள் அம்மாவிடம் சிரிப்போடு கூறின."சும்மா பேசிக்கிட்டு இருக்கறதே இவங்க வேலையாப் போச்சு!"

ஆனால் இதனை ரசிக்கும் மனநிலையில் இல்லாத தாய்க்காகம் பதற்றத்துடன் கூறியது"இல்லை குழந்தைகளே! வாழ்வதற்கு வேறு இடம் தேட வேண்டிய நெருக்கடி இன்றே வந்துவிட்டது.."

"ஏனம்மா இப்போது மட்டும் படபடப்பு ஆகிவிட்டாய்?"என்று புரியாமல் கேட்டன குஞ்சுகள்.
"இப்போது அவர்கள் தங்களை நம்பி காரியத்தில் இறங்க முடிவு செய்துவிட்டனர். நாளை எப்படியும் மரத்தை விட்டு விடுவார்கள்" என்றது தாய்க்காகம்.

தன்னை நம்பி களத்தில் இறங்கும் யாரும் வெற்றி இலக்கை அடைந்தே தீருவார்கள். அதனை இந்த உலகத்தில் யாராலும் தடுக்க முடியாது!

Post a Comment

0 Comments