HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நெருக்கடியான காலகட்டங்களில் எளிய மக்கள் செய்யும் அர்ப்பணிப்புகள் சாதாரணமில்லை.

நெருக்கடியான காலகட்டங்களில் எளிய மக்கள் செய்யும் அர்ப்பணிப்புகள் சாதாரணமில்லை. நிறைய நேரங்களில் அது வெளியே தெரிவதும் இல்லை. ஒரு உயிர்கொல்லி தொற்றுநோய் வருது, எல்லோரும் ஓடி ஒளிஞ்சுகோங்கன்னு அரசாங்கமே சொல்லும் போதும், நம்மால் ஏதும் செய்ய முடியாதான்னு பொதுசேவைக்கு வருபவர்களை உற்றுநோக்கினால் மிக சாதாரண மனிதர்களாகவே இருப்பார்கள்.

நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் தராங்க. வேற வழியே இல்லை இதை செய்யணுமே என்று நினைப்பவர்கள் இதுபோன்ற அசாதாரண சூழலில் வேலைக்கே வரமாட்டார்கள். சேவைமனப்பான்மை மரபணுவில் ஊறிப்போய் இருப்பவர்களே எந்த தொற்றுநோய்க்கும் பயப்படுவதில்லை! தொழுநோயாளிகளை கண்டு விலகி ஓடியவர்கள் மத்தியில், ஒருத்தி மட்டும் தன்னால் முடிந்தவரை தொட்டு தூக்கி வைத்தியத்திற்கு அனுப்பினாள். அதனால் தான் வெறும் தெரேசா அன்னை தெரேசாவாக உருவெடுத்தாள்!

முன்பின் தெரியாத எவரோ தொடப் போகும் கம்பியில் வைரஸை தேடித்தேடி அழிக்கற அர்பணிப்புடன் கூடிய சேவை உணர்வு இருக்கே! அது தான் கடவுள்! அப்புறம் விஜய்சேதுபதி சொன்னது போல், நம்மை காப்பாத்தணும்னு நினைக்கறதுக்கு கடவுளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.சக மனுஷியாகவோ, மனுஷனாக இருந்தால் போதும்.

Post a Comment

0 Comments