HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்ணின் மானம் காத்த, வேட்டி!

♥பெண்ணின் மானம் காத்த, வேட்டி!

♥திருச்சியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு செல்ல, உடமைகளுடன் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தேன். அன்று, முகூர்த்த நாளானதால், பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. 

♥என் அருகில், சுடிதார் அணிந்த, நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர், தன், ஆறு வயது மகளுடன் பஸ்சுக்காக காத்திருந்தார். பஸ் வரவே, அனைவரும் முண்டியடித்து ஏறினர். 
அந்த பெண் இறுக்கமான, 'லெகின்ஸ்' அணிந்திருந்தபடியால், உயரமான படிக்கட்டில் காலை துாக்கி ஏற முடியாமல் அவதிப்பட்டார். 

♥பின்னால் நின்றிருந்தோர், 'ஏற முடிந்தால் ஏறுங்கள்... இல்லையெனில், எங்களுக்கு வழி விடுங்கள்...' என, குரல் கொடுத்தனர்.
அந்த பெண், மீண்டும் முயற்சித்தபோது, இறுக்கமாக உடுத்தியிருந்த, 'லெகின்ஸ்' கிழிந்து அங்கம் தெரிய, அவமானத்தால் குறுகினார்.

♥என்ன செய்வதென்று தெரியாமல் அவதிபட்ட பெண்ணுக்கு, சட்டென்று என் பையிலிருந்து, ஒரு வேட்டியை எடுத்துக் கொடுத்தேன். 'ஆபத்துக்கு பாவமில்லை... முதலில் மானத்தை காப்பாத்துங்கள்...' என கூறியதும், தயங்கியபடியே, வேட்டியை வாங்கி, இடுப்பில் கட்டிக் கொண்டார்.

♥பெரும்பாலும் இளம் பெண்கள் தான், 'லெகின்ஸ்' எனப்படும் இறுக்கமான உடை அணிவர். ஆனால், திருமணமாகி, குழந்தை பெற்ற, உடல் பெருத்த குடும்ப பெண்களும், இதுபோன்ற இறுக்கமான உடைகளை ஏன் தான் அணிகின்றனரோ!
இனியாவது, வயது, உடலுக்கேற்ற உடைகளை அணிவரா... இல்லாவிட்டால், பொது இடத்தில் மானம் போவது நிச்சயம்!

Post a Comment

0 Comments