HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனைவியின் அருமை

மனைவியின் அருமை

♥அவள் என்னுடைய அம்மாவுடன் மருத்துவமனையில்

♥திருமணமான சில மாதங்கள் கழித்து, என்னுடைய அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. கட்டாயமாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய சூழலில் தள்ளப்பட்டார். எனது அப்பாவும் மிகவும் வயசானவர். எனது மனைவி நான் உங்கள் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறேன் நான் அவருடன் மருத்துவமனையில் தங்கிக் கொள்கிறேன் என்று கூறினார். கூறியது மட்டுமல்லாமல் அதை நிகழ்த்திக் காட்டினார். 

♥என் மனைவி எனது அம்மாவுடன் 2 வாரங்கள் மருத்துவமனையிலேயே தங்கினார் கூடவே இருந்து கொண்டு அனைத்து பணிகளையும் மேற்கொண்டார்.
தனது அம்மாவைப் போல் அன்பும் அரவணைப்பும் பார்த்துக்கொண்டாள். மிகவும் கஷ்டமான சூழலிலும் பணிவாகவும் அன்புடனும் நடந்து கொண்டாள்.அவளுடைய அந்த கனிவும் அன்பும் எங்கள் குடும்பத்தில் அனைவரையும் ஈர்த்தது. 

♥கடைசிவரை மருத்துவரின் ஆலோசனைப்படி தெளிவாக நடந்துகொண்டார். இதே நிலைமை என் திருமணத்திற்குமுன் ஏற்பட்டு இருந்தால் நான் எப்படிச் சமாளித்து இருப்பேன் என்றே தெரியாது. 

♥என் மனைவி அதை மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டார்.
மிகப்பெரிய அசாதாரணமான சூழ்நிலையிலும் அவளின் அந்த செயலானது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. 

♥ஒரு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை நான் அன்று தான் புரிந்து கொண்டேன். அன்றைய நாள் முதல் அவள் மீது உள்ள அன்பும் மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது 

Post a Comment

0 Comments