HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனைவி சொல்லே மந்திரம்!

♥மனைவி சொல்லே மந்திரம்!

♥"என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல...' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய, "நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற வேண்டுமா? உங்களுக்கு இதோ சில டிப்ஸ்...

♥வீட்டு வேலையைத் தவிர, தங்களால் நிறைய விஷயங்கள் சாதிக்க முடியும் என, பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே, மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

♥இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு என்று ஓர் லட்சியம், கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.
https://www.facebook.com/tamilmangaiyarmalar/

♥மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்கு திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தை கைவிடாதீர்கள்.

♥"ஆண்கள் அழ மாட்டார்கள்' என்பது சரி தான். உணர்வுகளை வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர் என்பதே உண்மை. அதற்காக, எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

♥நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது, உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்பு கொடுங்கள்.

♥நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை, மனைவிக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர் தான் அவர்களை பொறுத்த வரை, "முழுமையானவர்'.

♥பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.
https://www.facebook.com/tamilmangaiyarmalar/

♥வீட்டுக்கு வருகிற மனைவி, உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய் விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும், ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

♥அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது, நான்கு பேர் உங்கள் மனைவியை வியப்பாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

♥எல்லாவற்றிலும் புதுமை இருக்க வேண்டும் தான், இருப்பினும், அவ்வப்போது, "நீ தான் எனக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம்...' என்று "பழைய டயலாக்' பேசுவதில் தவறு இல்லை.
என்ன கணவன்மார்களே... மனைவியை கவர, இந்த டிப்ஸ் போதும் தானே!

Post a Comment

0 Comments