HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தை மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..!!

♥தை மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..!!

♥ தை மாதப்பிறப்பு என்பது சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் காலமாகும்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், கற்பனை திறன் மிகுந்தவர்களாகவும் இருப்பர். இவர்கள் அதிகம் சம்பாதித்தாலும் சிக்கனமாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிகம் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டார்கள்.

♥இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மனதில் ஒன்று வைத்துக்கொண்டு புறம் ஒன்று பேசத் தெரியாதவர்கள். இவர்கள் தமக்கு பிடித்த ஒரு பொருளையோ அல்லது பிடித்த ஒரு நபரையோ பற்றி அடிக்கடி பாராட்டிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். வருமானத்திற்கு ஏற்பதான் செலவு செய்வார்கள். வேலை என வந்துவிட்டால் மிகவும் புத்திசாலித்தனமாகவும், கெட்டிக்காரர்களாகவும் செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் நல்ல பணிவுடன் நடந்து கொள்வார்கள். தனக்கு வேண்டியதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

♥இந்த மாதத்தில் பிறந்தவர்களை நம்பி எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. ஆனால் தை மாதத்தில் பிறந்தவர்களின் பேச்சு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்பதுபோல் இருக்கும். தை மாதத்தில் பிறந்த பெண்கள் அழகிய முகம் கொண்டவர்களாக இருப்பர். தை மாதத்தில் பிறந்தவர்களுக்கு உடன்பிறப்புகள் இருப்பது மிகவும் அரிதான விஷயமாகும். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும், இல்லையெனில் அவர்களின் விருப்பத்திற்கே நடந்து கொள்வார்கள். இவர்கள் குடும்பத்தாருடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்துப் போகும் தன்மையுடையவர்கள்.

♥நிலப்புலன்கள், வீடு போன்ற அசையா சொத்துக்கள் பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புண்டு. இருந்தாலும் இவர்கள் சுயமாக சம்பாதித்து சொத்து சேர்ப்பார்கள். இவர்கள் தை மாதத்தில் பிறந்ததால், ஏற்ற தொழில் விவசாயம்தான். எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவார்கள். இவர்கள் பயணம் செய்வதில் மிகவும் பிரியம் கொண்டவர்கள். ஆடை, ஆபரணங்கள் சேர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களுக்கு நல்ல அறிவும், ஆற்றலும், அழகும் உள்ள வாழ்க்கைத் துணை அமைவார்.

Post a Comment

0 Comments