HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு ஆள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறான் .

ஒரு ஆள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்கிறான் . 

சாலை மிகவும் பெரிதாக , மிகவும் அகலமானதாக இருக்கிறது . 

ஒரு சிறிய பாறை ஒன்று சாலையின் ஓரத்தில் இருக்கிறது . 

அப்போது சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் அந்த ஆள் 

தான் எப்படியாகிலும் அந்தப் பாறையில் மோதாமல் போக வேண்டுமென்று பயம் கொள்கிறான் .

 ஆனால் கண்ணை மூடிக் கொண்டு சென்றாலும் கூட அந்த பாறையில் மோதி விடுவது என்பது எளிதான காரியம் அல்ல . 

ஏனென்றால் அந்தச் சாலையானது அந்த அளவுக்கு அகலமானது . 

அவனுடைய சிந்தனையில் அந்தப் பாறையில் மோதாமல் செல்வது எப்படி என்கிற ஒரே ஒரு எண்ணம்தான் உள்ளது . 

அவ்வளவு பெரிய சாலையில் எப்படி வேண்டுமானாலும் சென்றுவிட முடியும் .

 ஆனால் நாம் எங்கே அந்தப் பாறையில் மோதிவிடுவோமோ என்று நினைத்து அவன் பயப்படுகிறான் . 

இந்தப் பயத்தின் காரணமாக அந்தப் பெரிய சாலை அவனுக்கு மறைந்து போகிறது . 

அவனால் அந்தப் பாறையை மட்டும்தான் பார்க்க முடிகிறது . 

இப்போது அவனது சைக்கிளின் சக்கரங்கள் பாறை நோக்கிச் செல்லுகின்றன . 

அவனது சிந்தனை முழுதும் அந்தப் பாறையைத்தான் எண்ணுகிறது .

 அவன் ஏதோ வசியப்படுத்தப்பட்ட , ஹிப்னாடிசம் செய்யப்பட்டவனைப் போல் அந்தப் பாறையையே நோக்கிச் செல்கிறான் . 

சென்று அந்தப் பாறையில் மோதிவிடுகிறான் . 

புதிதாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்பவன் எதன்மீது மோதக் கூடாது என்று எண்ணுகிறானோ அதன் மீதுதான் மோதுகிறான் . 😜😝

விளக்குக் கம்பத்தில் மோதுகிறான் , பாறையில் மோதுகிறான் .
அந்தச் சாலை மிகவும் பெரியதாகவும் , அகலமானதாகவும் இருந்தது .

 அப்படியிருக்கும்போது இந்த மனிதன் எப்படி அந்தப் பாறையில் மோதி விபத்துக்குள்ளாகலாம் ?

கூயே ( Coue ) என்னும் மன இயல் வல்லுநர் மனிதனின் சராசரி மனம் ' ' எதிர் விளைவு விதி ' ' ( Law of reverse effect ) என்னும் விதியால் ஆளப்படுகிறது என்று கூறுகிறார் .

 எதிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறோமோ அந்தப் பொருளின் மீதே நாம் மோதிவிடுகிறோம் .

 ஏனென்றால் நாம் பயப்படுகின்ற அந்தப் பொருள் நமது சுய அறிவின் மையமாக ஆகிவிடுகிறது . 

இதைப்போன்றுதான் மனிதனும் கடந்த ஐயாயிரம் ஆண்டுகளாகத் தன்னைக் காமத்திலிருந்து காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறான் .

 அதன் விளைவு என்னவெனில் எங்கு பார்த்தாலும் , மூலை முடுக்குகளில் எல்லாம் காமத்தினுடைய பல்வேறு உருவங்கள் அவனுக்கு எதிர்படுகின்றன . 

' ' எதிர் விளைவு விதி ' ' மனிதனின் ஆன்மாவைப் பிடித்துக் கொண்டுவிட்டது .

மனதில் எந்த விஷயத்தை நீங்கள் தவிர்க்க வேண்டும் , விலக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த விஷயத்தில் தான் மனமானது அதிக அளவில் கவர்ந்திழுக்கப்படுவதையும் , வசியப்படுத்தப்படுவதையும் நீங்கள் ஒருபோதும் கவனித்ததில்லையா ?

 மனிதனை காமத்திற்கு எதிராக இருக்கும்படி கற்றுக்கொடுத்த மக்கள்தான் , அதே மனிதன் காமத்தைப் பற்றியே எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பதற்கு பொறுப்பாளிகள் ஆகின்றனர் .

 மனிதனிடம் காணப்படும் இந்த அதிதீவிர காமவேட்கைக்கு நாம் வழியதவறிய போதனைகளைத்தான் குற்றம் சொல்லவேண்டும் .

இன்று நாம் செக்ஸைப் பற்றி பேசுவதற்குக் கூட பயப்படுகிறோம் .

 நாம் ஏன் அந்த விஷயத்தைக் கண்டு பயப்படவேண்டும் ? 

அதற்கு காரணம் செக்ஸைப் பற்றி பேசுவதாலேயே மனிதன் காமுகன் ஆகிவிடுவான் என்று நாம் ஏற்கனவே எண்ணிக்கொண்டிருப்பதுதான் . 

இந்த நோக்கம் முற்றிலும் தவறானது . காமத்திற்கும் , காமப்பித்து பிடித்து அலைவதற்கும் அதிக வித்தியாசம் உள்ளது . 

நாம் செக்ஸைப் பற்றி பகுத்தறிவுடனும் , ஆரோக்கியமான வழியிலும் பேசுகின்ற தைரியத்தை எப்போது அபிவிருத்தி செய்துகொள்கிறோமோ அப்போதுதான் நமது சமுதாயம் இந்த செக்ஸ் என்னும் பேயிடமிருந்து விடுதலை பெற முடியும்

Post a Comment

0 Comments