HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அடுத்த தலைமுறைக்கு...

♥அடுத்த தலைமுறைக்கு...

♥நமக்குப் பின்
நம் வாரிசுக்கென
எதையெல்லாமோ
சேர்த்து வைக்கிற
நம் வாழ்வில்...

♥வாரிசுகளுக்கு
எதையெல்லாம் அவர்கள்
எடுத்துச் செல்ல வேண்டுமென
சொல்லிக் கொடுக்கிறோமா...

♥அதையும் இதையும்
செய்யாதே என
எதிர் மறையாய்
சொல்வதை விட்டு
அன்பாய் இரு
அடுத்தவரிடம்
மனம் விட்டுப் பேசி
மகிழ்ந்து
இதயம் விரி...
என விவரித்து
சொல்லியிருக்கிறோமா...

♥தாத்தா - பாட்டி
என நம் முன்
தலைமுறையினருக்கு
வணக்கம் சொல்லி
அவர்களை
மரியாதை செய்திட
மனதில் பதித்திருப்போமா...

♥அங்கே போகாதே
இங்கே போகாதே என
விரட்டும் நாம்
கோவிலுக்கு போ
நல்ல நண்பர்களுடன்
விளையாடு...
அதிகாலை கண் விழித்து
ஆதவனின் ஆதிக்கத்தை
காண் என
அருமையான செய்திகளை
அவர்களிடம் கடத்திச்
சென்றிருப்போமா...

♥அந்த நற்செயல்களை
அவர்களின் சந்ததிக்கு
எடுத்துச் செல்லும் கடமையை
அவர்களுக்கு புகட்டியிருப்போமா...

♥இயற்கை செல்வங்களை
இனிய வயல்வெளி
விவசாயத்தை...
இங்கேயுள்ள கனிம வளங்களை
சுகாதரத்தையும்
துாய்மையையும்
மழை நீரையும்
காடுகளையும் அதன்
உயிரினங்களையும்!

♥நாம் உணர்ந்து
வாழ்ந்தது போக அவர்கள்
தங்கள் தலைமுறைக்கு
கடத்திச் சென்றிட
மனிதப் பிறவியின்
பெருமையை
மாண்பு படுத்தி எடுத்தியம்பி
மகிழ்ந்திடுவோமா!

ரஜகை நிலவன், 
மும்பை.

Post a Comment

0 Comments