HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

எளிமையான_நிகழ்ச்சி; #எல்லாருக்கும்_மகிழ்ச்சி!

♥#எளிமையான_நிகழ்ச்சி; #எல்லாருக்கும்_மகிழ்ச்சி!

♥வெளிநாட்டில் உள்ள என் உறவினர் மகன், கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில், குழந்தைகளுக்கு காது குத்து நிகழ்ச்சியை நடத்துவதற்காக, தன் குடும்பத்தோடு வந்திருந்தார். தன் அப்பாவிடம், 'காது குத்து விழா விமரிசையாக இருக்கணும்; பணத்தை பற்றி பிரச்னையில்ல. பந்தல், அலங்காரம், மேள, தாளம்ன்னு அசத்தணும்...' என்றான்.

♥'கோவில்ல வச்சு முடி இறக்கி, காதணி விழா நடத்தப் போறீயா... இல்ல புது பணக்காரனான பெருமைய, தம்பட்டமடிச்சு காட்டப் போறீயா... நம்ம ஊர் இன்னமும் ஏழை பாழைகள் நிறைந்த ஊராத் தான் இருக்கு; நேத்து வரைக்கும் நாமும், அப்படி தான் இருந்தோம். எளிமையா இருந்தாத்தான், அவங்க நம்ம கிட்ட மனம் விட்டு பேசி, நெருக்கமா பழகுவாங்க.
'பணம், ஆடம்பரம்ன்னு அலட்டினால், மிரண்டு போய், விலகிடுவாங்க. 

♥அங்க போய், நம்ம புது வசதியை காண்பிக்கறது, அவங்கள பழிக்கிற மாதிரி இருக்கும். ஊருக்கெல்லாம் சாப்பாடு போட்டு, விசேஷத்தை எளிமையா நடத்தலாம்; இதுக்கு சரின்னா, கிராமத்துல வச்சுக்கலாம்; இல்ல விமரிசையா செய்யணும்ன்னா, அதை நகரத்துலயே மண்டபத்துல நடத்திக்கலாம்...' என்று திட்டவட்டமாக கூறினார், அவரது தந்தை.

♥ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், பெரியவரின் பேச்சில் இருந்த உண்மையை புரிந்து, கார்களை தவிர்த்து, பஸ்சில் பயணம் செய்து, கிராமத்து வீட்டில் தங்கி, ஊர் பொது மக்கள் புடை சூழ, காதணி விழாவை நல்லபடியாகவும், திருப்திகரமாகவும் நடத்தி திரும்பினார்.

♥'அமெரிக்கா போனாலும், நம்ம வம்சத்து புள்ள, எளிமையா இருக்கான்; இங்கேயும் சிலதுங்க இருக்குதுங்களே... நாலு பணம் பாத்துட்டால், உடனே, கொம்பு முளைச்சு, ஊர் என்ன விலை, நாடு என்ன விலைன்னு கொக்கரிக்குதுக...' என்று ஊரார் பேசிக் கொண்டதை கேட்க முடிந்தது.

♥பெரியவங்க சொன்னா, பெருமாள் சொன்ன மாதிரி என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. புரிந்து நடப்பது தான் புத்திசாலித்தனம்!
— எஸ்.பரணி, சென்னை.

Post a Comment

0 Comments