HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைப்பது சரியா ? தவறா?

♥கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைப்பது சரியா ? தவறா?

♥நம் சான்றோர்கள் நம் தினசரி பழக்க வழக்கங்களில் பல அறிவியல் ரீதியான நியதிகளை நமக்கு அன்றே வகுத்து கொடுத்துள்ளனர். காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் எதையும் நமக்கு சொல்லவில்லை. அவர்கள் ஏற்படுத்திய ஒவ்வொரு பழக்கத்திற்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அறிவியல் ரீதியாகவும், தெய்வீக ரீதியாகவும் உண்மை என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

♥இந்த உண்மை தெரியாமல் மூடநம்பிக்கைகளை பின்பற்றக் கூடாது என்று நம்மில் பலர் கூறிக் கொண்டு இருக்கின்றோம். அது முற்றிலும் தவறு.

♥திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள் ஆண் பெண் என அனைவரும்  நெற்றியில் பொட்டு வைக்கும் பழக்கத்தை பின்பற்றுகிறோம். அதற்கான காரணம் நம் இரண்டு புருவங்களுக்கு மத்தியல் தான்  நமது உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.

♥அதை தொட்டு தூண்டும் விதமாகவும், அங்கு உருவாகும் வெப்பதை கட்டுப்படுத்தும் பொருட்டும், ஆண் பெண் அனைவரும் நெற்றியில் பொட்டு வைக்கிறோம். திருமணம் ஆன பெண்கள் தன் நெற்றி வகுடு பகுதியில்  பொட்டு வைப்பார்கள். அவ்வாறு வைப்பதால்  அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. அவர்களின் உடலில் சில சுரப்பிகள் தூண்டப்படுகிறது.

♥நெற்றி வகுடுவில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதே போன்று, கர்ப்பபையும் நன்றாக வலு பெறுகிறது. திருமணத்திற்கு பிறகு  பெண்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவும், கர்ப்பபை வலுப்பெறவும் நெற்றி வகுடில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

♥அதன் காரணமாகவே, வளைகாப்பு செய்யும் போது, அனைவரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள். இதனால் கர்ப்பப்பை வலுபெறுகிறது. கர்ப்பப்பை வலுபெற்றால், குறை பிரசவம் உண்டாகாது. நிறை மாதமாக இருக்கும் போது சுகபிரசவம் ஏற்படும்.

♥கணவரை இழந்த பெண்கள் பொட்டு வைக்க கூடாது என்று சொல்வதற்கு காரணம் அவர்களுக்கு  பாலியல் சுரப்பி தூண்டப்படாமல் இருப்பதற்காக தான். அனால்  பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல், “கணவனை இழந்த பெண்கள் பொட்டே வைக்க கூடாது” என்று மாற்றி விட்டனர். கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுடில் பொட்டு வைக்கக் கூடாது என்று சொல்வதற்கு உண்மையான காரணம் இது தான்.

Post a Comment

0 Comments