குடும்பம்...
ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம்
அடிக்கடி பேசாவிட்டாலும்
அப்பாவைபற்றி அதிகம்
தெரிந்து வைத்திருக்கும் மகன்.
அண்ணனின் இரகசியங்களை
எல்லாம் தெரிந்திருந்தும்
அப்பாவிடம் சொல்லாத அன்புத் தங்கை..
தங்கை இன்னொரு வீடு செல்லும் வரை
அவளைக் காக்கும்
மதுரை வீரனாய் அண்ணன்.
தன் வரவு செலவு சோகங்களை
சமையலறைக்குள்ளேயே
ஒளித்து விட்டு எப்போதும்
சிரித்த முகத்துடனே
வலம் வரும் அம்மா..
உழைத்த களைப்போடு வீடு
வந்த போதும்
பிள்ளைகளின் முகத்தைக் கண்டதும்
புத்துணர்ச்சி அடையும் அப்பா..
சேலை முந்தானையில் முடிஞ்ச
சில்லரைகளாலே பேரனின் பேத்தியின்
பொருளாதாரத் தேவைகளை
தீர்த்துவைக்கும் பாட்டி..
நாங்கலாம் அந்த காலத்துலன்னு
ஆரம்பிச்சி கதை சொல்லியே
பேத்தியை தூங்க வைக்கும் தாத்தா..
சொர்க்கத்தை மண்ணில் காட்டுவது
பாசம் நிறைந்த குடும்பம்..
இந்த நாளில் உடன் பிறந்த
பாச உணர்வுகளை நேசத்தோடு
வாழ்த்தி வரவோற்பாம்.. வாங்க..
வாழியவே அன்பு சொந்தங்கள்..
0 Comments
Thank you