♥ஒரு மூதாட்டியின் வேதனை குரல்!!!!!
♥கள்ளிப்பாலில் தப்பித்தேன்..
காடு மேடு சுற்றிவந்தேன்...
சுள்ளி விறகு பொறுக்கிவந்தேன்...
குடும்ப சுமையை..நானும் தாங்கி வந்தேன்...
புத்தகம் தூக்க ஆசைதான்..
குடும்ப பொதிசுமக்கும் சூழ்நிலை..
தம்பிக்காக வேலை சென்றேன்...
சுமையை நானும் குறைக்கவே...
♥பெண்ணாய் பிறந்த பயணமதில்..
பாவ கொல்லிக் கண்களில் தப்பித்தே...
பாழும் நாட்களை ஓட்டிவந்தேன்..
திருமண நாளும் இனிதே வந்தது..
கற்பு ஒன்றே சீதனமாய்..
இனிய கணவனுக்கு நானும் பரிசளித்தேன்..
♥மக்கள் நான்கினை பெற்றிட்டேன்..
உயிர் மன்னவன் விட்டு சென்றுவிட்டான்..
குழந்தைகள் நாலையும் படிக்கவைக்க...
பத்துப் பாத்திரம் தேய்த்தேனே...
நால்வரும் நன்றாய் வளர்ந்தவுடன்..
அம்மாவை வைப்பது யார் வீட்டில்...
என்றே கவலைப்பட்டனரே..
♥கணவன் கொடுத்த தன்மானம்...
சுங்குடி சேர்த்த காசினிலே..
சுயமாய் கடை ஒன்றை வைத்தேனே..
அடுக்குமாடி கடைதனிலே..
கேட்கும் விலையை கொடுக்கும் மனிதர்..
அப்பாவி கிழவி என்னிடமே...
அஞ்சு ரூபா கீரைக்கு அதிகமென்றார்..
ஒத்த ரூபாயை குறைத்துவிட்டே..
அன்பாய் வாங்கிக் கொண்டேனே..
♥பாழும் வயிறு பசித்திடுமே...
பாமர கிழவி என்ன செய்வேன்...
எத்தனை சோதனை வந்தாலும்...
எத்தனை இன்னல்கள் வந்தாலும்...
அத்தனை சுமைகளும் குறைத்திடவே
இறைவன் என்னுடன் இருக்கின்றான்...
♥உயிர் மூச்சு இருப்பது சிலகாலம்..
என் உழைப்பில் நானும் வாழ்ந்திடுவேன்..
கணவன் விண்ணில் காத்திருப்பான்..
நல் மகளிர் பட்டம் பெற்றுவிட்டேன்..
விரைவில் விண்ணில் பறப்பேனே...
0 Comments
Thank you