HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

காணாத வேளைகளில் கண்கள் கலங்கிடுவாள். தேசம் கடந்த பிள்ளையை தேடாமல் பார்க்காமல் இருந்திடமாட்டாள்...!

♥காணாத வேளைகளில்
கண்கள் கலங்கிடுவாள்.
தேசம் கடந்த பிள்ளையை
தேடாமல் பார்க்காமல்
இருந்திடமாட்டாள்...!

♥எதிர்த்து பேசும் பிள்ளையிடம்
எதையும் எதிர்பாராமல் நிற்பாள்.
இறுதியாக சொல்ல அவளிடம்
இருப்பவை இவைதான்...!

♥மகளே! மகனே!
மட்டற்ற மகிழ்ச்சி உண்டாச்சி
வயிற்றில் உன்னை
வடிவம் காணாது சுமக்கையில்...!

♥எட்டி உதைக்கையிலும்
எட்டு வைத்து நீ நடக்கையிலும்
என்னுள்ளே உண்டான
எதிர்பார்ப்புக்கள் ஆயிரமாயிரம்...!

♥பக்கத்து வீட்டாரிடமும்
பகிரங்கமாய் சொல்லி வைத்தேன்
அகிலம் ஆள்வான்
அன்னை பெயர் காப்பான்
என் பிள்ளை என்று...!

♥உண்ணும் உணவு சிந்தினால்
உடனே வசைபாடும் மகளே!மகனே!
எத்தனைநாள் என் கைகளில்
எடுத்திருப்பாய் வாந்தி...!

♥தும்மினால் சேலை நனைகிறது - அதற்காக
துரத்தினாய் மகளே!மகனே!
அடிக்கடி வருகிறது வருத்தம்
அதை காரணம் காட்டி விரட்டினாய்
மகளே!மகனே!

♥இதையெல்லாம் வீட்டினுள்ளே
இருத்திவிட்டு இருமாப்புடன்
எல்லோரிடமும் சொன்னேன்...!
எஐமானியாக நடந்து கொள்கிறேன்
என் மகள்/மகன் வீட்டில் என்று...!

♥புடைவை வாங்கி தந்தாய்
புண்ணியவான் திருந்திவிட்டான் என
முதலிலே நினைத்தேன்
முகநூலிலே பதிவிடத்தான் இந்நாடகம்
பின்னாளிலே அறிந்து கொண்டேன்...!

♥ஆசையாய் ஓடிவரும் பேத்தியிடம்
அன்பாய் பேசுவதற்கும்
என் மகள் / மகன் நீ
என்னை அனுமதிக்கவில்லை...!
எனது துயர் அறியவில்லை...!

♥கட்டிலில் பொம்மையானேன்...!
காகிதத்தில் எழுத்தென ஆனேன்...!
பூட்டாத வீட்டினுள்ளே
பூட்டியே கிடந்தது
என் மனம்...!

♥மரணம் தொடும் வேளையிலே
மகளே! மகனே! ஒன்றை கூறுகின்றேன்
கேள்!
கேட்டுவிட்டு கண்கலங்காதே
தாங்கிடாது உன் அன்னை மனம்!

♥அன்பை கிள்ளிக்குடு உன் பிள்ளைக்கு!
அன்னையை மறந்துவிடாதே சொல்லிக்கொடு!
ஆண்டவன் அன்னை என கற்றுக்கொடு!
ஆதரவு அன்னை மட்டுமே என்றிடச்சொல்!

♥வயது போகும் காலத்தில்
வாந்தி வந்தால் உன் கைகள்
ஏந்திக் கொள்ள வேண்டும் என்று சொல்!
தள்ளாடும் வயதினிலே
தாங்கிக்கொள்ள எனது பிள்ளை
நீ வேண்டும் என்று சொல்!

♥நான் பட்ட கஷ்டங்கள்
உனக்கு வேண்டாம் மகளே!மகனே!
ஊருக்கும் தெரிய வேண்டாம்
உள்ளுக்குள் நடந்த கொடுமைகள்...!

♥அடுத்த ஜென்மத்தில் - உன்
அன்னையாகவே பிறக்க எண்ணி
விடைபெறுகின்றேன் மகளே/மகனே...!

♥அஷ்வினி வையந்தி- இலங்கை
கங்குவேலி.

Post a Comment

0 Comments