HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஊரில் பல பெண்கள் அழகாய்.. வசதியாய் இருந்தும் உன் கண்களுக்கு என்னை மட்டும் பிடித்திருந்தது

♥ஊரில் பல பெண்கள் அழகாய்.. வசதியாய்  இருந்தும்  உன் கண்களுக்கு என்னை மட்டும்  பிடித்திருந்தது.. மணமும் முடித்ததாய்.. இரு பிள்ளைகளுக்கு தாய் ஆக்கினாய்.. உன்னையும் ஆண்மகனாக்கினேன்                    

♥வருடங்கள் ஓடியது  இப்பொழுது என்னை தவிர பிற பெண்களை எல்லாம் உனக்கு பிடித்துப் போகிறது.. ஏன் என்று கேட்டால் ஆணவ பதில்தான்... இதில்  தவறேதும் இல்லை என....

♥பெண்ணின் இயலாமை என்பதை தாண்டி பெண்ணின் பலவீனம்..  தன் பெற்றவர்கள் கண்ணில்  கண்ணீர் மீண்டும் தன்னால் வர வேண்டாம்.. என்பதால் தான்.. சுமைதாங்கியாக மாறி வாய்மூடி மௌனிக்கிறாள்.... 

♥தான் பெற்ற பிள்ளைகளின் எதிர்காலம்... தந்தையின் நிழல் மீது இருக்கவேண்டும் என்பதால்..இந்த  வாழ்க்கையை எப்படியும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம்..பல பெண்களுக்கு ...

♥ இறைவனுக்கு பெண்களின் மீது என்ன கோபம்..  பிரசவ வலி தாங்கும் உடலை படைத்தவன்.. எதையும் தாங்காத இளகிய மனதால் பலவீனமாக படைத்தாரே.....                                     

♥தாலிகட்டி ஆரத் தழுவியவன்... அதே கையால் ஓங்கி  அடிக்கும் பொழுது தடுக்க கூட இயலவில்லை . ..  மனதும் உடலும் அவனுக்கு அடிமையாகி வலி தாங்கியாக மாறிவிட்டது.... மாங்கல்யாத்தால்...

♥இறைவா  ஆண்களை பலமாக படைத்ததின் வெளிப்பாடு ஒரு பெண்ணை அடித்து அடக்கி வாழவா... இல்லை நம்பி வந்தவள் நம்பி்க்கை இன்றி   ஆண் செய்யும் தவறுகளை கண்டு கொள்ளாமல் குடும்பம் நடத்த வேண்டும் என்றா......

♥ ஆணின் பலம் பெண்ணை காப்பதிலும் ஆணின் தைரியம் சிறப்பாக குடும்பம் நடத்துவதும் தான் என புரியவை இறைவா.. இந்த ஆண்களுக்கு....

♥சுகுணா மித்ரா

Post a Comment

0 Comments