HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கருச்சிதைவுக்கு பின் அறிகுறிகள்

♥கருச்சிதைவுக்கு பின் அறிகுறிகள்
#காய்ச்சல்
#வயிற்றில் வலி
#யோனியிலிருந்து கடுமையான இரத்தப்போக்கு

♥கருவுற்றிருந்த பெண்ணிடம் இந்த அறிகுறிகள் காணப்பட்டால் அது கருச்சிதைப்பின் விளைவாக இருக்கலாம். ஆனால் இவை கருச்சிதைவின் விளைவாகவும் இருக்கக்கூடும். கருப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்தல், இடுப்பெலும்புக்குழி அழற்சி காரணமாகவும் இருக்கலாம்.

♥கருச்சிதைப்பைச் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துகொள்ளச் சிலர் மருத்துவமனையை நாடுகிறார்கள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்ல பயப்படுகிறார்கள். அல்லது வெட்கப்படுகிறார்கள். சிலர் குறிப்பாகக் கருச்சிதைப்பு இரகசியமாகவோ, சட்டத்திற்கு மாறாகவோ செய்யப்பட்டிருந்தால் மருத்துவ உதவியை நாடுவதற்கு கூட அஞ்சுகிறார்கள்.

♥கடுமையாக நோயால் பாதிக்கப்படும் வரை அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லமாட்டார்கள். இந்தக் காலதாமதம் மரணம் வரை கொண்டு செல்வதாகக் கூட இருக்கலாம். கருச்சிதைப்பைத் தொடர்ந்து கடுமையான இரத்தப்போக்கு (மாதவிலக்கில் இரத்தம் போவதை விட அதிகமாக) அல்லது தொற்று ஏற்படுதல் மிகவும் ஆபத்து. உடனே மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

♥இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் அதிர்ச்சிக்கு சிகிச்சை தரவும். தொற்று ஏற்பட்ட அறிகுறிகள் இருந்தால், குழந்தை பிறந்த பிறகு காய்ச்சலுக்கு மருந்து தருவதைப் போலவே தரவும்

Post a Comment

0 Comments