HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தேடிக்கொண்டே இருக்கிறாள் அவளுக்குள்ளே அவளைத் தேடுகின்றாள்..

♥தேடிக்கொண்டே இருக்கிறாள்
அவளுக்குள்ளே
அவளைத் தேடுகின்றாள்..

♥சொல்ல முடியா உணர்வுகள்...
வண்ணம் கலைந்த எண்ணங்கள்...
முன்னேற முடியா கலாசாரங்கள்...
முட்டுக்கட்டை போடும் சம்பிரதாயங்கள்...
அவள் அறை முழுதும் நிரவியே கிடக்கின்றது.

♥அத்தனையையும் தகர்த்துக்கொள்ள
ஓர் "அவள்" வேண்டும்...
"அவள்" அற்ற அவளை
பிய்த்தெறிகிறது அவளுக்குள் ஓர் ஆன்மா.
அவளை வலிமையாக்கி
இயங்க செய்ய போராடுகிறது
அவளுக்குள் இன்னொர் ஆன்மா.
எப்போதாவது எட்டிப்பார்க்க மாட்டாளா..?
"அவள்" என்ற ஏக்கத்தோடு...!

♥ஒர் பெண்
சுயம் உடைத்து சமூகம் எதிர்த்து
மரபு வேலிகளைத் தாண்டி
வந்துவிட மாட்டாளா....???
சிதிலமாய் போன ஒவ்வொரு
பெண் வாழ்விலும்,
ஓர் சாதக விடியலைக் காண
மாட்டாளா....??

♥கடந்துபோன யுகங்களில்
தொடர்ந்து வந்த சில பல
விலங்குகளை உடைத்திட
எண்ணி,
தனக்குள் இருந்து தானே
புறப்படமாட்டாளா...??
இம்மையிலும் மறுயைிலும்
ஏற்றம் ஒன்றைக் காணத் துடிக்கும்
"அவள்"
ஒவ்வொரு பெண்ணுக்குளிருந்தும்
புறப்பட மாட்டாளா...?

♥பெண் என்றால்
பூவல்ல..
புரட்சியுமல்ல...
தேவதையுமல்ல...
தெய்வமுமல்ல...
பெண் என்றால் பெண்ணே...
தன் பாதையை தானே
செதுக்கத் தெரிந்தவள்...

♥இதை பிறர் உணர அவள் வேண்டும்.
அவள் வெளிப்பட வேண்டும்...
இதையுணர்ந்தால்
பெண் அடிமையுமல்ல
பிறர் உடமையுமல்ல.

♥#சங்கரி_சுவீட்சர்லாந்
உலகத்தமிழ் மங்கையர் மலர்

Post a Comment

0 Comments