HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சுமங்கலி பூஜை செய்வது எப்படி?

♥சுமங்கலி பூஜை செய்வது எப்படி?
♥திருமணமான சுமங்கலிப் பெண்கள், தங்கள் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காகவும், இல்லத்தின் அமைதி மற்றும் சந்தோஷத்திற்காகவும் கட்டாயம் சுமங்கலி பூஜையை வீட்டினில் செய்ய வேண்டும்; மேலும் சுமங்கலிப் பூஜைகளில் கலந்து கொள்ளல் வேண்டும். இந்த பூஜை செய்ய மிகுந்த செலவுகள் ஆகும் என்பதெல்லாம் இல்லை; மிகக்குறைந்த செலவிலேயே உங்கள் வசதிக்கேற்றாற் போல் பூஜை நடத்தலாம். ஆகையால், தோழியரே! சுமங்கலிப்பூஜை ஏன் செய்ய வேண்டும் என அறிமுகப் பகுதியிலேயே அறிந்து கொண்டோம்.., இனி பூஜையை செய்வது எப்படி என்று இந்த பதிப்பில் படித்தறியலாம்..!
#எப்படிசெய்வது?
♥இல்லத்தை நன்கு தூய்மைப்படுத்தி, மாவினால் அழகுக்கோலமிட்டு, வீட்டில் எங்கும் மாவிலை தோரணம் கட்டி இல்லத்தை நன்கு அழகுபடுத்த வேண்டும்; மேலும் வீட்டிலுள்ள அனைத்து சுவாமியின் படங்களுக்கும் பூ மற்றும் தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 எனும் எண்ணிக்கையில், அவரவர் வசதிக்கு ஏற்ற வகையில் பக்கத்து வீட்டு அல்லது தோழி பெண்களை அழைக்கலாம்; நம் இல்லத்திற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைத்து, உபசரிக்க வேண்டும்.
♥இல்லத்திற்கு வருகை தந்த பெண்கள், தேவியின் வடிவங்கள் என எண்ணி, நல்ல முறையில் வரவேற்று, ஒரு தாம்பாள தட்டில் அவர்களை நிற்க வைத்து நீங்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்ய வேண்டும் .
குங்குமம், சந்தனம், மலர்கள் போன்றவற்றை அவர்களுக்கு கொடுத்து, பெண்களை மனையில் மரியாதையுடன் அமரச் செய்ய வேண்டும். வருகை தந்த ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாகக் கருதி, அவர்களுக்கு தீபாராதனை செய்து வழிபடல் வேண்டும்.
♥அவர்களை தனித்தனியாக நமஸ்காரம் செய்து வணங்கி, அவர்களுக்கு புடவை, ரவிக்கை, கண்ணாடி, குங்குமச்சிமிழ், மஞ்சள், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தட்சனை போன்றவற்றை கொடுக்க வேண்டும். இவற்றில் எவை உங்களால் முடியுமோ, அதை வாங்கி கொடுத்தால், போதுமானது..! ஆனால், பெண்களுக்கு தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும்.
பூஜைக்கு வரும் பெண்களுக்கு கட்டாயம் உணவு அளிக்க வேண்டும்; வருகை தந்த பெண்கள் உண்ட பிறகே, இல்லத்தலைவி உண்ண வேண்டும்; மீண்டும் ஒருமுறை, வருகை தந்த அனைத்து பெண்களையும் காலில் விழுந்து வணங்கி, அவர்களை வழியனுப்ப வேண்டும்.
♥இப்பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி. இத்தினங்களில் ராகு காலமில்லாத எந்நேரமும் நல்ல நேரமே. இப்பூஜை செய்யப்படும் வீட்டினில் வறுமை, துன்பம், நோய், தோஷம் போன்றவை நீங்கி, மனைவி கணவனுடன் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்தோடும் வளமோடும் அத்தம்பதியர் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
அது மட்டுமல்ல, இவ்வைதீகத்தில் பக்தியும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழியும் இருக்கிறது

Post a Comment

0 Comments