HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

தற்கொலையை தவிர்க்க என்ன செய்யலாம்?

தற்கொலையை தவிர்க்க என்ன செய்யலாம்?
1- எளிய வழி:- 
ஒருதரம் தற்கொலை செய்ய முயன்று பார்க்கலாம்!
அப்போது தான் எந்தவொரு தற்கொலை முயற்சியும் வலி, வேதனை, அவதி இன்றி சாத்தியமாகாது என்று தெரியவரும்!

2- அடுத்த வழி:-
தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப் பட்டோருக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவது முதல், வீடு செல்வது வரை நடப்பவற்றை பார்க்க வைக்கலாம்!

தற்கொலைக்கு முயல்வோரில் ஒரு 10-20% மானோருக்கு மிகத்தீவிரமான காரணங்கள் இருக்கும். 
உதாரணம்- தீவிரமான/ குணப்படுத்த முடியாத நோய்நிலைமை, அடைக்க வழியேயில்லாத கடன் தொல்லை, போன்றன!
அதில் முட்டி மோதிப் பார்த்து, இனி இயலாது என்ற நிலையிலே தான் மரணத்தை தேர்ந்தெடுப்பார்கள்.
சாவதற்கு கையாளும் வழிமுறைகள் மிக உறுதியாக இருக்கும்.
இவர்களில் ஏறத்தாழ 90% மானோர் வைத்தியசாலைக்கு வரும் வழியில்/ வந்து சிறிது நேரத்தில் போய்ச்சேர்ந்து விடுவார்கள்!

நாம் கதைக்கப் போவது மிச்சமிருக்கும் 80% மானோரைப் பற்றி!
அம்மா ஏசிப்போட்டா...
அவர் கோல் ஆன்சர் பண்றார் இல்ல..
அப்பா ஃப்ரண்ட்ஸோட ட்ரிப் போக விடல்ல..
டியூசன் எக்சாம்ல குறைய மார்க்ஸ்..!
எக்சட்ரா எக்சட்ரா!
மாரடைப்பு, கிட்னி பெயிலியர், ஆஸ்த்துமா , செப்சிஸ் என்று நாம் அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில் , நடுச்சாமம் ஒரு மணிக்கு பனடோலை அள்ளிப்போட்டுக் கொண்டு வந்து சேருவார்கள்..!

இவர்களுக்கு எப்படியான ட்ரீட்மெண்ட் வழங்கப்படுகிறது என்பதை பார்த்தீர்களானால், வாழ்க்கையில் தற்கொலை செய்யும் எண்ணமே வராது!

அவசர சிகிச்சைப் பிரிவினுள் வந்ததும், முதலில் lavage எனப்படும் " குடல் கழுவும்" செயற்பாடு நடக்கும். சில காரக் கலவைகள் வலுக்கட்டாயமாக வாய்வழியே புகட்டப்பட்டு, வாந்தியெடுக்க வைக்கப்படுவார்கள்.
பின், " கரிமருந்து" என அன்போடு அழைக்கப்படும் charcoal புகட்டப்படும்.
அதன் வாசனையை நுகர்ந்தாலே அன்றைய பொழுதுக்கு சாப்பாடு வேண்டியிருக்காது!

ஒருமாதிரி சத்தி சத்தியாக எடுத்து, வாயெல்லாம் கரியாக வந்தால், அடுத்து ஊசி குத்தும் படலம் தொடங்கும்.
இதில் ABG எனப்படும் நேரடியாக நாடிகளில் இருந்து இரத்தம் எடுக்கும் பரிசோதனைகள் நஞ்சு குடித்து வரும் அநேகமான எல்லாருக்கும் எடுக்கப்படும்.
வலி மிகுந்த சோதனை இது!
சோதனை மேல் சோதனை என்னவென்றால், 4-6 மணித்தியாலங்களுக்கு ஒருதரம் இப்பரிசோதனை தொடர்ச்சியாக செய்யப்படும்.

கொஞ்சம் தீவிர நிலை என்றால், மூக்கினூடாக இரைப்பையினுள் ஒரு குழாயை நுழைத்து, அதன் மூலம் மருந்து/ உணவு வழங்கப்படும்.
மேலும் சலக்குழாய் எனப்படும் catheter கதறக்கதற சலவாயினூடாக போடப்படும்.
யோசித்துப் பாருங்கள்.. ஆணுறுப்பை பிடித்து, ஒரு பிளாஸ்டிக் குழாயை அதனுள் நுழைத்து, சிறுநீர்ப்பை வரை கொண்டுசெல்ல வேண்டும்.
சித்திரவதைக்கூடங்களில் கடைசி முயற்சியாகச் செய்யப்படும் வதைகள் இவை..!

இதெல்லாம் முடிந்து ஆசுவாசப் பட்டால், அடுத்த 24 மணித்தியாலத்துக்கு அன்னம் தண்ணீர் கிடையாது!
வாய் காயக்காய கிடக்க வேண்டியது தான்!
போதாக்குறைக்கு உடம்பெல்லாம் வயர்களை இணைத்து, அங்கால இங்கால அசைய இயலாதவாறு வைத்திருப்பார்கள்!

இவை பொதுவான நடைமுறைகள்.
இது தவிர ஒவ்வொரு நஞ்சுக்கும் ஒவ்வொரு வித சிறப்பு சிகிச்சைகள் இருக்கின்றன.
உதாரணத்துக்கு அலரி விதையை அரைத்துக் குடித்து வந்தால், தொடையில் துளைபோட்டு, கால் நாளம் மூலம் இதயத்திற்கு கம்பி ஒன்று அனுப்பப்பட்டு, அதில் பேஸ்மேக்கர் பொருத்தி அழகுபார்ப்பார்கள்!

இன்னும் கொஞ்சம் சீரியசாகி, சுவாசத்துக்கு கஷ்டம் ஏற்பட்டால், தொலைந்தீர்கள்...
வாயைப்பிளந்து, பிளாஸ்டிக் குழாய் ஒன்றை தொண்டைக்குள் நுழைத்து , நுரையீரலுக்குள் காற்றை செலுத்துவார்கள்.
கண்முழித்த பின், தொண்டை நோவு சரியாக பல நாட்களாகும்.
சிலநேரம் உங்கள் கம்பீரமான/ இனிமையான குரல் காணாமல் போய், கீச்சுக் கீச்சென்று கத்திக்கொண்டிருப்பீர்கள்!

இதைத்தவிர, குடிக்கும் நஞ்சால் தொண்டை எரிந்து போனால் ( உதாரணத்துக்கு மண்ணெண்ணை) , அதன் பின் வாழ்நாள் பூராக சாப்பிடுவதே நரகமாகும்.
சிறுநீரகம் செயலிழந்தால் டயலைசிஸ் என்று திரிய வேண்டி வரும்!

ஆக, தற்கொலையாளர்களே, உங்களுக்கு தெரிந்த யாரும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டிருந்தால், அவர்களது அனுபவங்களை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்..!
அதன் பின்னும் சாகத்தான் போகிறேன் என்றால், தயவு செய்து காலை 9-12 மணிக்குள் குடித்து விட்டு வாருங்கள். நடுச்சாமங்களில் வந்து தாலியறுக்காதீர்கள்.

3- இதைத்தவிர டிப்ரஷன், தற்கொலை பாவம்- கட்டாயம் நரகம் என்றெல்லாம் பேஸ்புக்கில் வகுப்பெடுத்து தற்கொலையை தடுக்க முடியும் என்று நினைப்பதெல்லாம் மூடநம்பிக்கை!
தற்கொலை ஒரு திடீர் நிகழ்வு, சடுதியான மனத்தளம்பலில் எடுக்கபடும் உடனடி முடிவு.
அந்த இடத்தில் தடுத்தாட்கொண்டு, உபதேசம் வழங்கினால் தடுக்கலாமே ஒழிய, prophylactic ஆக அட்வைஸ் வழங்கியெல்லாம் ஒன்றும் ஆகப்போவதில்லை!

முடியுமாயின் அவர்களின் தற்கொலையை தூண்டும் பிரச்சனைகளுக்கு ஏதும் தீர்வை பெற்றுக் கொடுப்போம்.

Post a Comment

0 Comments