HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

சாபங்களின் வகைகள்

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR


               சாபங்களின் வகைகள்

பெண் சாபம்
இது எப்படி ஏற்படுகிற தென்றால். பெண்களை ஏமாற்று வதும் , சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும் , மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது . 
பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும் .

பிரேத சாபம்
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும் , அவருடைய உடலைத் தாண்டுவதும் , பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும் , இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும் . பிரேத சாபத்தால் ஆயுள் குறையும் ,

பிரம்ம சாபம்
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது , வித்தையை தவறாக பயன்படுத்துவது , மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது , இவற்றான காரணங்களால் , பிரம்ம சாபம் ஏற்படுகிறது . பிரம்ம சாபத்தால் , வித்யா நஷ்டம் அதாவது , படிப்பு இல்லாமல் போகும் . 

சர்ப்ப சாபம்
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும் , சர்ப்ப சாபம் உண்டாகும் . இதனால் , கால சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும் .

பித்ரு சாமம்
முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும் , தாய்- தந்தை தாத்தா - பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப வைப்பதும் , பித்ரு சாபத்தை ஏற்படுத்தும் . பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி , வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது , குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை
ஏற்படுத்தும் .

முனி சாபம்
எல்லை தெய்வங்கள் , மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும் . முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும் .

கோ சாபம்
பசுவை வதைப்பது , பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும் . இதனால் , குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

பூமி சாபம்
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும் , பாழ்படுத்துவதும் , ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப்
புதைப்பதும் , தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும் , அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும் . பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும் .

கங்கா சாபம்
பலர் அருந்தக்கூடிய நிரை பாழ் செய்வதாலும் , ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும் , கங்கா சாபம் வரும் . கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது

விருட்ச சாபம்
பச்சை மரத்தை வெட்டுவதும் , கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும் , மரத்தை எரிப்பதும் , மரங்கள் சூழ்ந்த இடத்தை , வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும் . விருட்ச சாபத்தினால் , கடன் மற்றும் நோய் உண்டாகும் .

தேவ சாபம்
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது , தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால் , தேவ சாபம் ஏற்படும் . தேவ சாபத்தால் உறவினர்கள்
பிரிந்து விடுவர் .

குலதெய்வ சாபம்
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல்
இருப்பது , குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும் . ஒரு வித துக்கம்
சூழ்ந்துகொள்ளும் .

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக  மாறும் . தீயவர்களை அழிக்கும் .

Post a Comment

0 Comments