HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கட்டட தொழிலாளியிடம் கற்ற பாடம்!

♥கட்டட தொழிலாளியிடம் கற்ற பாடம்!

♥எங்கள் வீட்டு மாடியில் வீடு கட்டினோம். கட்டட தொழிலாளர்களோடு, இளம் வயது சித்தாள் ஒருவள் இருந்தாள். அவளிடம் பேச்சு கொடுத்ததில், எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளதாகவும், மேலும் படிக்க வசதியின்மை மற்றும் குடும்ப பொறுப்பு வந்து விட்டதால், வேலைக்குப் போகும் நிலை வந்து விட்டதாக கூறிய போது, அவள் மீது இரக்கம் ஏற்பட்டது.

♥அவளுக்கு என்னாலான உதவியை செய்ய எண்ணி, 'எனக்குத் தெரிந்த ஒருவர், வீட்டு வேலைக்கு ஆள் கேட்கிறார், போகிறாயா... காலை சென்று, மாலை திரும்பிடலாம், இரண்டே பேர் தான்; வேலை அதிகம் இருக்காது. ஏ.சி., வீடு, இரண்டு வேளை சாப்பாடு, பொழுது போகலன்னா, 'டிவி' பாக்கலாம். சம்பளம், இதை விட இரண்டு மடங்கு அதிகம் கிடைக்கும்...' என்று சொல்ல, மறுத்து விட்டாள்.

♥காரணம் கேட்ட போது, 'சுமை துாக்கி, மாடி ஏறி, இறங்கி, வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, உரம் ஏறிப் போனவர்கள் நாங்கள். திடீரென வெயில் படாமல், கனத்த வேலை செய்யாமல், ஏ.சி.,யில் அலுங்காமல், குலுங்காமல், 'டிவி' பார்த்தபடி இருந்தால், ஊளை சதை போட்டுவிடும்.

♥'தினமும், எங்கள் மீது வெயில் படுவதால், அவ்வளவு சீக்கிரம் தலைமுடி நரைக்காது; தோல் வியாதியும் வராது...' என்று சொன்னவள், 'அன்றாடம் கூலி வாங்கிப் போய், புதிய காய்கறிகள் வாங்கி, வேண்டிய அளவு சமைத்து, சூடாக சாப்பிட்டு, அப்போதே காலி செய்து விடுவோம். அந்த வீட்டில் எல்லாம், பிரிஜ்ஜில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள் தான் கிடைக்கும்; அதில் சத்து இருக்காது...' என்றாள்.

♥படித்த நாம், வசதி வாய்ப்புகளை வைத்து, உடல் நலம் பேணுவதில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம். நம்மால் இவர்களைப் போல் உழைக்க முடியாவிட்டாலும், உணவு விஷயத்தில் அவர்களை பின்பற்றுவது நல்லது.

♥துவைத்த துணிகளையும், மற்ற உணவுப் பொருட்களையும் காய வைக்க, நாமே தினம் மாடி ஏறி, இறங்குவது மிக நல்லது. அப்போதாவது, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் விட்டமின்களை பெறலாமே!
— எஸ்.ஜெயம் சதாசிவம், மதுரை

Post a Comment

0 Comments