HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பொன் வண்டு...

♥பொன் வண்டு...

♥சிறிய வயது நினைவுகளை அசைபோடுவதே தனி சந்தோசம் தான் அனைவருக்கும். இன்றைய நினைவில் பொன்வண்டு.

♥பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த பொன் வண்டு எங்களிடம் படாத பாடு பட்டது எங்க ஊர் ஆத்தோரம் பொன்வண்டுகள் நிறைய இருக்கும். சனி ஞாயிறு பள்ளி விடுமுறைகளில் காலை உணவுக்கு பின் பொன்வண்டு வேட்டைக்கு செல்வோம் அங்கு சென்று செடி கொடிகளில் தேடி தேடி பொன்வண்டி பிடித்து வருவோம் இதில் இந்த வண்டை பிடிக்கும் போது தலைக்கும் உடம்பிற்கும் உள்ள இடையில் கை பட்டால் கடித்து விடும் நாங்க அப்பவெல்லாம் கை விரல் கட் ஆகிடும் என பிட்ட போட்டு மிரட்டுவோம்...

♥நண்பர்களிடம் விளையாடுகிறேன் என்ற பேரில் அவர்கள் சட்டைப்பைக்குள் இந்த வண்டை விட்டு விட்டு வேடிக்கை பார்ப்போம் எங்களை எதிரியாக உள்ள பெண்களின் சாமுண்டரி பாக்ஸ் இல் போட்டு அவர்களை அதை திறக்க வைத்து கத்த வைத்து வேடிக்கை பார்ப்பதும் ஒரு சந்தோசம்...

♥சாமுண்டரி பாக்ஸில் தவிடு போட்டு அதன் மேல் வாகை இலையை போட்டு அதற்குள் அடைத்து வைப்போம். சில நேரங்களில் டப்பாவை திறந்ததும் பறந்து ஓடிவிடும். இருத்தும் பத்திரமாக வைத்து பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டு போவோம்.

♥பொன்வண்டு சிறியதாக சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என கலர்க்கலராய் முட்டையிடும். அந்த முட்டையில் விளக்கெண்ணையை தடவி வெயிலில் வைத்தால் குஞ்சு பொறிக்கும் என்ற வழிவழியாய் வந்த வாய்ச்சொல்லை நம்பி எண்ணையை தடவி வெயிலில் காத்திருந்த நாட்கள் எல்லாம் உண்டு. கடைசிவரை அப்படி ஒன்று நிகழ்வதேயில்லை.

♥பொன்வண்டு எல்லாருடைய புத்தகப் பைக்குள்ளும் வாகை இலையை சாப்பிட்டபடி வலம் வந்த நாட்கள்தான் எத்தனை இனிமையானவை.

♥பொன்வண்டு இன்றும் மறக்க முடியாது ஒன்று...

Post a Comment

0 Comments