HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

கடந்த சில நாட்களில் கொரோனாவால் நாம் கற்றுக்கொண்ட சில பாடங்கள்

♥கடந்த சில நாட்களில் கொரோனாவால்  நாம் கற்றுக்கொண்ட சில பாடங்கள்:

♥அமெரிக்கா உலகின் முன்னணி வல்லரசு என்றும் .. அமெரிக்காவால்  முடியாதது எதுவும் இல்லை எனவும் 
நினைக்கமாட்டோம்

♥மக்களை பட்டினி போட்டு நாசகார ஆயுதங்களை உலக நாடுகள் தயாரித்து வர சீனா ஒரு ஏவுகணையை கூட வீசாமல் முழு உலகையும் வென்றள்ளது

♥ஐரோப்பியர்கள் ஜப்பானியர்கள் தங்களை தோற்றத்தில் முன்னிலை படுத்திக்கொள்வது போல் மெத்த படித்த அறிவாளிகள் அல்ல. 

♥ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கான பயணங்கள் இல்லாமல் நாம் விடுமுறையில் வாழ முடியும்.

♥பணக்காரர்கள் உண்மையில் ஏழைகளை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளனர்.

♥விலைகள் உயரும்போது மனிதர்கள் தங்கள் சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் சந்தர்ப்பவாத மற்றும் வெறுக்கத்தக்கவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

♥சுகாதார வல்லுநர்கள் கடவுளை விட மதிப்புடையவர்கள்.

♥நுகர்வு இல்லாத உலகத்தில் சவுதி  பெட்ரோலிய எண்ணெய் பயனற்றது.

♥மிருகக்காட்சிசாலையில் விலங்குகள் எப்படி தனிமைச்சிறையை  உணர்கின்றன என்பதை நாம்  உணர்கிறோம்.

♥மனிதர்கள் இல்லாமல் இப்பூலகம் அழகாக ஆரோக்கியமாக விரைவாக மீளுருவாக்கம் செய்கிறது.

♥பெரும்பான்மையான மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்.

♥நாமும் குழந்தைகளும் அதிவிரைவு குப்பை உணவு இல்லாமல் வாழலாம்.

♥சிறு குற்றங்களுக்காக சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க முடியும்.

♥சுகாதாரமான வாழ்க்கை வாழ்வது கடினம் அல்ல.

♥பெண்கள் மட்டுமே சமையல் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

♥ உலகில் நிறைய நல்ல மனிதர்கள் உள்ளனர்.

♥இவையனைத்தும் ...நாம் ஒரு புதிய சகாப்தத்திற்கு செல்கிறோம் என்பதையே உணர்த்துகிறது...😷😷🏃🏃

Post a Comment

0 Comments