HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அந்தக்காலம்

#அந்தக்காலம் 

தொலைபேசி இல்லாமலே சொன்ன நேரத்திற்கு நின்றிருந்தோம்.

காதல்கள் பலதும் கடிதங்களிலேயே வாழ்க்கை ஓட்டின.

தோல்விக்காதல்கள் தற்கொலை செய்துகொண்டது. அல்லது எங்கோ ஓடித்தொலைந்து கொண்டது.

ஆட்களை அடுக்கி பேருந்துகள்  
அவஸ்தை தந்ததில்லை

வீட்டிலொரு மிதி வண்டி நின்றால் 
பெருமை கொண்டோம். 

மிதிவண்டியை அலங்கரித்து அதில்
ஆனந்தம் அடைந்தோம்.

வேலைக்கு போகாதவனுக்கு 
விவசாயம் தெரிந்திருந்தது

பாம்புக்கடிக்கு 
பார்வை பார்த்தோம்.

கண்ட நோய்களெல்லாம் நாம் 
கண்டது கிடையாது

ஐஞ்சு மணிக்கு எழும்பி சாமிக்கு
அறுகம் புல்லும் பூவும் பிடுங்கினோம்

அப்பா பால்கறக்க அம்மா வீடுபெருக்க
அக்கா கோலம் போட்டாள்.

சுந்தரம்பாள், கோவிந்தராஜன் பக்திபாடல்கள் கோவில்களில் ஒலிக்கும்

கல்யாண வீடுகளில் பலகார சூடுகள் தான் ஊர், உறவுப்பெண்களின் பாராளுமன்றம்

பாய் போட்டு சாப்பாடுவதில் பரவசமடைந்தோம்

வானொலிப்பாடல்கள் 
மனப்பாடம் ஆகின

ஆல் இந்தியா ரேடியோ பாடல்கள் ஒலிபரப்பாகும் நேரத்துக்காய் தவமிருந்தோம்

அப்துல் கமித்தின் பாட்டுக்கு பாட்டுக்கு அலைமோதுவோம்.

இசையும் கதையும் 
இனித்தே போனது.

டைனமோவை சுத்தி 
நாலைந்து வீடு கூடி இரவு 
ஏழரைசெய்தியை கொற்றவை, ரத்னா குரலில் கேட்டோம்

வருசம் தீபாவளிக்கு உறவுகள் வீடுகளில் உலாவந்தோம்.

மாலையில் நாம் 
மாபிள் அடி, கிட்டிப்புல்லு என்று விசியாக
பெண்கள் புளியமர நிழலில் அரட்டை அடித்தார்கள்

ரஜனியின் படங்கள் பார்த்து வார்த்தைகள்
மனதில் பதிந்து போனது

அழி இறப்பர் வாசனையில் ஆனந்த சுகமடைந்தோம்.

மயிலிறகு குட்டிபோட்டது புத்தக ஒற்றைக்குள். அதற்கும் வாசனைப்பவுடர் போட்டோம்

காகிதத்திலேயே நீரில் கப்பலும் , ஆகாயத்தில் ராக்கட்டும் செய்தோம்

ஆசிரியர்களுக்கு 
அச்சம் கலந்த மரியாதை செய்தோம்.
அவர்களும் கரிசனை கொண்டு கண்டித்தார்கள்

கோயில் திருவிழாக்கு 
இருபது ரூபா இதய திருப்தியாய் இருந்தது.

ஐஸ் பழம் அரை நொடியில் சாயம் போயிருக்கும். 

முழுப்பாவாடை சட்டை பெண்பிள்ளைகள் கைகள் கலர்காப்பால் நிறையும்

மாதமொரு தடவை வீட்டில் ஆண்கள் அனைவருக்கும் அப்பா சொல்வதைப்போல் கட்டையாக முடிவெட்டு நடக்கும். 
மூச்சும் காட்ட முடியாது எம்மால்

எவரும் வெளிநாட்டிலும் இல்லை 
அரச வேலையிலும் இல்லை. இருந்தும் கஷ்ரம் கடன் இருந்ததில்லை.


Post a Comment

0 Comments