HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

இது #தான் #அவர்கள் #விதியோ?

#இது #தான்  #அவர்கள் #விதியோ?

நண்பனொருவன் இருந்தான் நல்லாப்படிப்பான்.
நிறத்தில் கறுப்பாகிலும் 
குணத்தில சிறப்பு.

செத்தவீடு போனாலும் 
வெத்திலை கூட தொட்டதில்லை.

அடுத்த வகுப்பில 
அஞ்சலி எண்டொருத்தி.
இரட்டை ஜடை பின்னல். 
நெற்றில ஒரு குறி

கலர் குறைவெண்டாலும் 
கண்ணுக்க குத்திற
கவர்ச்சியான பிள்ளை.
பவுடர் வாசமே 
பல பேரைக்கவர்த்திழுக்கும்

ஆறேழு மாசமா அவன் 
அலைஞ்சு திரிஞ்சான் 
அஞ்சாறு வார்த்தைக்கூட 
அவளோட கதைச்சதில்ல

என்னை பாவம் செய்தனோ
எள்ளோடு சேர்ந்த 
எலிப்புழுக்கை கதையா
என்னையும் சேர்த்துக்கொண்டு!

அமாவாசை பெளர்வம் 
அதிஸ்ட நாள் எல்லாம் பார்த்து 
அவளட்ட காதல் சொன்னான்
அலட்சியமா போயிட்டாள்.

இரண்டு வருசம் கழிய 
இதையெல்லாம் மறந்து -அவன்
இப்ப இஞ்சினியர் படிக்கிறான்

நாலைஞ்சு வருசம் கழிய 
நான் அவளைக்கண்டேன்! 

இடுப்பில ஒண்டு
ஆறு மாசத்தயாரிப்பில 
அடுத்தது வயித்துல.

அவளுடன்..

கடைத்தெருவில் செல்லும் போதும் 
கையில் குறை பீடி
கஞ்சா அடிப்பவன் போல 
கறைபடிந்த பல். 
கணவனாய்த்தான் இருக்க வேண்டும்.

எத்தனையோ தெரிவுகள் 
இருக்கையிலும் இவர்களுக்கு !
இப்படி ஏன் விழுகிறார்கள்?
பொள்ளாச்சி சொல்லும் 
பேரதிர்ச்சி கதைகள்போல..

Post a Comment

0 Comments