HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

80களிலும், 90களிலும் பிறந்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள் என்றே கூறலாம்.

♥80களிலும், 90களிலும் பிறந்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள் என்றே கூறலாம்.

ஒரு காலத்துல இதையும் நம்பினோம் :

♥பொய் சொன்னா சாமி கண்ண குத்தும்.

♥வெத்தலை, பாக்கு போட்டால் மாடு முட்டும்.

♥தாலி கட்டுனா குழந்தை பிறக்கும்.

♥சாப்பிடலேனா பூச்சாண்டி புடிச்சுட்டு போயிடுவான்.

♥ஒரு டைம் முட்டுனா தலையில கொம்பு முளைக்கும்.

♥அரிசி தின்னா கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்.

♥எந்த ஆபத்தில் இருந்தாலும் சக்திமான்னு சொன்னா வந்து காப்பாற்றுவார்.

♥பார்க்க வச்சு சாப்பிட்டா வயிறு வலிக்கும்.

♥ஒத்த மைனா பார்த்தா ஸ்கூல்ல டீச்சர் கிட்ட அடி விழும்...

♥ரெட்டை மைனா பார்த்தா லக்கு...

♥இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. திரும்பி பார்த்தா பேய் அடித்துவிடும்.

♥அப்போ பொண்ணுங்க பக்கத்தில உக்கார வைக்குறதெல்லாம் தண்டனை.

♥ஆசுகு ஒரு டீயவ தயாரிக்கும் கம்பெனி என்று நம்பினோம். ஆனால், உண்மையில் அது டயர் கம்பெனி.

♥இடி இடிக்கும்போது அர்ஜூனா அர்ஜூனா என சொன்னால், வந்த இடி நம்மீது விழாது.

♥பென்சிலை துருவி சுடுகஞ்சியில் போட்டால், விடிவதற்குள் அது ரப்பராக மாறும்.

♥மயில் தோகையை புத்தகத்தின் நடுவில் வைத்திருந்தால், அது குட்டி போடும்.

♥டிவி, ரேடியோக்களுக்கு உள்ளே குட்டியாக ஆளுங்க இருந்து ஆடுறாங்க, பாட்டு பாடுறாங்க.

♥கால் கட்டை விரலுக்கு பக்கத்து விரல் பெரிதாக இருந்தால் அந்த பெண் புருசனுக்கு அடங்கமாட்டாள்.

♥பழங்களை விதையோடு விழுங்கினால் வயிற்றில் செடி முளைக்கும்.

♥டிவியில மகுடி சத்தம் வந்தால் மியூட் பண்ணனும். இல்லைன்னா வீட்டுக்குள் பாம்பு வந்துவிடும்.

♥ஆண்களுக்கு தலையில் ரெட்டை சுழி இருந்தால் அவர்கள் பின்னாளில் இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

♥படத்தில் இறப்பவர் உண்மையாகவே இறந்து விடுவார் என நினைத்த காலமும் உண்டு.

♥முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும்.

♥பல் விழுந்துவிட்டால் கூரை மேல் போட்டுவிட வேண்டும். இல்லையெனில் பல் முளைக்காது.

♥வெயிலும், மழையும் ஒன்றாக வந்தால் காக்காவுக்கும், நரிக்கும் கல்யாணம் நடக்குது.

♥நாக்கு கருப்பா இருந்தா சொல்லுறது பழிக்கும்.

♥இதுபோல் இன்னும் பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்...

♥இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா...!!

Post a Comment

0 Comments