HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்கள், கண்கள் மாதிரி!

♥பெண்கள், கண்கள் மாதிரி!

♥ஞாயிற்றுக் கிழமைகளில், அருகில் உள்ள என் தோழியின் வீட்டிற்கு செல்வது வழக்கம். நான் போகும் போதெல்லாம், அவள் தன், ஒன்பது வயது மகனிடம், பெண்களை உயர்த்தி பேசியபடி இருப்பாள். 

♥இதுபற்றி அவளிடம் கேட்ட போது, 'நான், என் மகனிடம், பெண்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்குறேன். 'பெண்கள் அனைவரும் அம்மாவை போன்றவர்கள். உடன் படிக்கும் மாணவியர், கூட பிறந்தவர்கள் மாதிரி; உனக்கு அக்கா, தங்கை இருந்திருந்தால், நீ எப்படி அவங்கள பத்திரமாய் பாத்துக்குவாயோ, அதேமாதிரி, உன்னுடன் படிக்கும் மாணவியரையும் பாத்துக்கணும். 

♥எந்த பெண்ணையும் கேவலப்படுத்தக் கூடாது; பெண்களை மட்டமாக பேசும் நண்பர்களுடன் சேரக் கூடாது. முடிந்தால், அவங்கள திருத்து. 

♥உன் நண்பர்களிடமும், நான் சொல்லும் கருத்துகளை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு புரிய வைக்கணும். எல்லா ஆண் பிள்ளைகளும், பெண்களை புரிந்து, மதிக்கணும்'ன்னு அடிக்கடி அவன் கிட்ட சொல்றேன். 

♥இதனால், 'டீன் -ஏஜ்' வயதில் அவர்களுக்குள் உண்டாகும் பிரச்னையை எளிதாக சமாளிக்க முடியும்...' என்றாள், தோழி.
இதேபோல், ஆண் பிள்ளையை பெற்ற அனைவரும் நடந்தால், பிற்காலத்தில், பாலியல் பிரச்னைகள் மற்றும் வன்கொடுமைகள் நிச்சயம் குறையும். இது, உளவியல் ரீதியான உண்மையும் கூட! 


Post a Comment

0 Comments