HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மறுமணம்

♥#மறுமணம்...

♥ஆணிற்கொரு மறுமணம் என்றால்..
வயதில்லை எந்த ஒரு தடையில்லை. சமுதாய பிரச்சனையும் இல்லை.
இறந்த மனைவியின்  நினைவில்லை அவள் 
இல்லை யென்ற வேதனை இல்லை...

♥பெண்ணிற்கு மறுமணம் என்றால்.. மட்டும் 
இறந்தவன் நினைவு வந்து விடும் அவன்
குடும்பம் தழைக்க ஓர் வாரிசு இல்லை யென்ற வருத்தம் வந்து விடும்.. சமூக கௌரவம் வந்துவிடும்...

♥மூன்று மாத வாழ்க்கையில் 
மூளைச்சாவில் கணவன் போனால்..
மூலையில் அமரவைத்து..
மூக்குச் சிந்தி செல்லும் கூட்டம் சொல்லுது..
வாரிசு இல்லை.. இறந்தவன் நினைவின்றி உடலுக்காக அடுத்தவனை கைப்பிடிக்கிறாளென்று... 

♥பிள்ளையொன்று பிறந்து விட்டால் 
பிரிதொரு வாழ்க்கை அமைக்க நினைக்குமோ இக்கூட்டம் .
பிள்ளைக்காக வாழ்ந்திடு பிள்ளைக்காக வாழ்ந்திடு என்றுச் சொல்லி தங்கள் மகிழ்வைக் கூட  தளர்த்திடாது நகர்ந்துச் செல்லும் கூட்டம்.. சொல்லுது இறந்தவன் நினைவு.அவளிற்கு இல்லையென்று.

♥இறந்தவனை மட்டுமே நினைந்திருந்தால் 
இவள் வாழ்க்கை மீண்டிடுமோ...
இல்லை குழந்தையொன்று தான் பிறந்திட்டால்... குடும்பமாக ஆகிடுமோ..??

♥கண்ணீரில் கரைந்தபடி காலமெல்லாம் இவள் வாழ கலகலவென சிரித்தபடி 
செல்லும் கூட்டம்... அடுத்த சோலி பார்க்க
மூலையில் அமர்ந்தவள் மீண்டுமொரு 
மாலையேந்தினாள் மட்டும் 
மூலைக்கு மூலை நின்று பேசுது கதை..

♥இல்லாமல் போனவனுக்காக இவள் 
இடிவிழுந்த மரமாகா பட்டுப் போக வேண்டுமோ..?? துளிர்த்திடல் ஆகாதோ..??
இறந்தவன்  குலம் வாரிசற்று போனதற்காய்.. இவள் குலம் தழைக்க கூடாதோ ..?? பேசும்... மூடர் கூட்டம்...

♥வாரிசுக்காக பெண்களின் வாழ்க்கையை பாழாக்காது.. வாழவையுங்கள் மீண்டும் வாழ்வழித்து..!! வாழச் சென்றால் வாழ்த்திடுங்கள் வழி மறைக்காது..!!!!

Post a Comment

0 Comments