HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண் பிறப்பின் வலிகள்யாருக்கும் தெரியுமா ??

♥பெண் பிறப்பின் வலிகள்
யாருக்கும் தெரியுமா ??
சொல்கிறேன் கேளுங்கள்...

♥ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் 
 அவள் அந்த குடும்பத்தின் #சாமி ஆவாள் 

♥நாள் போக்கில் வளர்ந்து 
சிறு வயதில் அவள் காண்பது 
மட்டுமே அவள் வாழ்வின் சந்தோசம் 
வயதுக்கு வந்த பருவம் வந்துவிட்டால் அன்றோடு பாதுகாப்பு எனும்  சிறையில் அடைக்கப்பட்டு விடுகிறாள் 

♥அவள் சந்தோசம் ஆசை எல்லாம் 
அன்றோடு தொலைந்து போகிறது 
ஏன் தொலைந்து போகிறது 
வெளியில் அவள் செல்லும் போது 
அவள் கற்புக்கு ஏதோ ஒரு ஆபத்து 
ஆகிவிடுமோ என்ற பயம்... 


♥ ஏன் பெண் பிள்ளையாய் பிறந்தோம் 
என்றும்...  நம் மனதை யாருமே புரிந்து கொள்ள வில்லையே என்றும் 
அவள் மனம் ஏமாற்றம் அடையவில்லை 
தன்னை பாதுகாத்த தாய் தந்தை 
சந்தோஷத்திற்க்கே வாழ்ந்து விடுவோம் 
என்று 

♥அவர்கள் காட்டும் ஆணிற்கு 
தலை குனிந்து தாலி ஏற்கிறாள்...
அதோடு முடிய போவதில்லை 
அவள் சிறை.... பெற்றோருக்காக வாழ்ந்தவள்... இப்போது கணவருக்காகவும் வாழ்கிறாள்...

♥தாய்மை என்ற பட்டம் பெறுகிறாள் 
குழந்தை பெறும் போது 
சுகப் பிரசவத்திலும் உயிர் பிழைத்து வருகிறாள்... சிசேரியன் செய்தாலும் உயிர் பிழைத்து வருகிறாள்... 

♥மாறுகிறது அவள் வாழ்க்கை 
தன் பிள்ளைக்காக.. மாற்றுகிறது அவள் வாழ்க்கையை பிள்ளைகளின் எதிர்காலம்
பெற்றோர் மற்றும் கணவனுக்காக வாழ்ந்தவள் இப்போது பிள்ளைகளுக்காகவும் வாழ்கிறாள்...

♥உயிர் உள்ள வரை தன் பெற்றோர் கணவன் பிள்ளையின் சந்தோசத்திற்கு வாழ்கிறாள் இதில் அவளுக்கான சந்தோசம்  எதுவும் இல்லை ... அவர்களின் சந்தோசமே அவளின் சந்தோசமாக வாழ்கிறாள்...  வாழ்ந்து மடிகிறாள்.... குடும்பம் எனும் சிறையிலேயே..... 

♥பெண்ணை தவறாய் எண்ணாதீர்கள் அவள் வலியோடு வாழ்ந்து பிறர் சந்தோஷத்திற்க்காக சிரித்து வாள்பவள் 
அவளின் உணமையான அன்பில் 
வாழ்ந்துவி்டுங்கள் அவளுள் உன் தாய்முகம் காண்பாய் 

#பெண்மையை_நேசி

Post a Comment

0 Comments