HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

என்ன டீச்சர்... பையன் படிக்கவே மாட்டேங்கறான்... சரியாச் சொல்லிக் குடுக்கலாம்ல...?

♥என்ன டீச்சர்... பையன் படிக்கவே மாட்டேங்கறான்... சரியாச் சொல்லிக் குடுக்கலாம்ல...?
  
♥சரியாத்தாங்க மேடம் சொல்லித்தரோம்... வகுப்பிலே கவனிக்கவே மாட்டேங்கறான்...
மிரட்டினாப் பொருட்படுத்தறதே இல்லே. ரொம்ப அலட்சியப் படுத்தறான். அடிக்கவோ எங்களுக்கு உரிமை இல்லை.. 
    
♥கொஞ்சம் சிரிச்சுக் குணமாப் பேசினா... அதுக்கும் அவனோட ப்ரண்ட்ஸ் எல்லாம் அசிங்கமாப் பேசறாங்க.. ஏழாங்கிளாஸ் பையனைக் கூட விட்டுவைக்க மாட்டேங்கறாங்கன்னு... 

♥என்னவோம்மா.. ஆசிரியத் தொழில் மேலே ரொம்ப ஆசைப் பட்டுப் படிச்சுட்டு இங்கே வந்தேன். அதனாலே பல்லைக் கடிச்சுட்டு வேலைக்கு வந்துட்டு இருக்கேன்.. குடும்ப சூழல்..சட்டுன்னு அப்படி வேலையை விட்டுடவும் முடியாது...

♥உங்க கிட்டயும் நெறையத் தடவை நான் சொல்லிட்டேன். ஆனா, நீங்க என்னடான்னா.. 'சம்பளம் வாங்கறீங்கல்ல...?? உங்களுக்கு வேறென்ன வேலை....?'. ன்னு உங்க பசங்க முன்னாடியே கேக்கறீங்க.... அவங்க எப்படி எங்களை மதிப்பாங்க???? 
        
♥கொஞ்சம் உங்க பசங்ககிட்டே சொல்லிக் கொடுங்க... "பாடம் சொல்லித் தரவங்களை தெய்வம் ரேஞ்சுக்கெல்லாம் வேண்டாம்..மனுஷப் பிறவிகளா மதிச்சு நடங்க...."ன்னு.. 
எனத் தாழ்ந்த குரலில் அந்த ஆசிரியை பேசி முடிக்க,
      
♥திகைத்து நின்ற அந்தத் தாயினால் எதுவும் சொல்ல முடியவில்லை. 
இந்த இளம் ஆசிரியையைக் கூட்டிச் செல்ல வந்த தன் அப்பாவை பார்த்ததும்... 
"போலாம்ப்பா...."  எனக் கம்மிய குரலில் கூறியவாறே.. விழிகளில் துளிர்த்த நீரைப் பிரயத்தனப் பட்டு   உள்விழுங்கிக் கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தாள்... செய்வதறியாமல்
 அந்தப் பெண்ணின் பின்னாலேயே போக எத்தனித்த என் மனதைப் பிடித்து இழுத்துக் கொண்டு, வீடு திரும்பினேன்.

ஷண்முக வடிவு

Post a Comment

0 Comments