HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அன்பேமுப்பொழுதும் உன் காதல் வேண்டாம்முழுவதும் உன் கற்பனை வேண்டும்,

அன்பே
முப்பொழுதும் உன் காதல் வேண்டாம்
முழுவதும் உன் கற்பனை வேண்டும்,

காமம் என்ற பெயரில்
கட்டிப் பிடிக்க வேண்டாம்
கண்கள் என்ற பெயரில்
காட்சியாக வாழ்ந்தால் போதும்,

விரல்கள் உறசிக் கொள்ள வேண்டாம்
விழிகள் பேசிக்கொண்டாலே 
போதும்,

நெருக்கங்கள் எப்போதும் 
வேண்டாம்
நெஞ்சம் தேடி வந்தால் போதும்,

கொஞ்சிப் பேசும் வார்த்தைகள்
தேவையில்லை!
சில நேரம் நான் இரசிக்கும்
மௌனங்கள் போதும்,

அதிகமான வார்த்தைகள் வேண்டாம்
அளவான மௌனங்கள் போதும்,

மரங்கள் மத்தியில்
மறையும் இரசியங்கள் வேண்டாம்!
மயங்கி பார்க்கும் 
இரசனைகள் வேண்டும்!!,

தொட்டுப் பேசும் அளவில்
நீ வேண்டாம்
தொலைவில் இருந்து பார்க்கும் அளவில்
நான் வேண்டும்,

மூச்சுக் காற்றினை பறிக்கும்
முத்தங்கள் வேண்டாம்
முகவரி அறியும்
சத்தங்கள் போதும்,

நீயும் நானும் மடிமீது சாய வேண்டாம்
மனதோடு மனம் 
சங்கமித்தால் போதும்,

தேடி வந்து பார்க்கும் 
அவசியம் வேண்டாம்
நிலவாக நினைவுகள் 
தேயாமல் இருந்தால் போதும்,

எப்போதும் பார்க்கும் 
பெரும் பார்வை தேவையில்லை
எப்போதாவது பார்க்கும்
சிறு பார்வை போதும்,

கன்னங்களில் கைகளாக இருக்க
வேண்டாம்
எண்ணங்களில் ரேகையாக இருந்தால்
போதும்,

அலைபேசியில் அழைக்க வேண்டிய
அவசியம் தேவையில்லை!
அலைகடலென ஆசைகள் இருந்தால்
போதும்

இடைவெளிகள் எப்போதும்
வேண்டும்
அப்போதும் இதயமாக நீயே
இருக்க வேண்டும்,

உறவுகள் என்னவென்று
உறவுகளுக்கு காட்ட வேண்டாம்!
உணர்வுகள் என்னவென்று
உள்ளம் தெரிந்து கொண்டால் போதும்!!,

காதலர்கள் என்று பிறர் யாரும்
அழைக்க வேண்டாம்!
காவியம் என்று படைத்தாலே போதும்!!
உயிரே
நம் காதலை...!

Post a Comment

0 Comments