HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்பிள்ளை

#பெண்பிள்ளை
♥நிறைமாத கர்பிணியான அவள் அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலையை
முடித்துவிட்டு வேக வேகமாக ஓடினான்
கோவிலுக்கு, இறைவனிடம் கைகூப்பி
வேண்டினான். 

♥இறைவன் அவன் முன் தோன்றி உன் பிரார்த்தனை என்னவென்று என்னிடம் சொல் நான் நிறைவேற்றி வைக்கிறேன் அதற்க்கு கைமாறாக நீ நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றான்
இறைவன். இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு அவன் வேண்டுதலை இறைவனிடம் கூறினான். 

♥எந்த வேண்டுதல் என்னவென்றால் " என் மனைவிக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் பெண் குழந்தை வேண்டாம் " என்று வேண்டிக்கொண்டான்.
இறைவனும் அவனின் வேண்டுகோளை
நிறைவேற்றினான். 

♥உங்களது வேண்டுகோள் என்னவென்று கூறுங்கள் இறைவா என்று அவன் கேட்டான். எனது வேண்டுகோளை காலம்
வரும்பொழுது கேட்கிறேன் என்றான் இறைவன். சுமார் இருபத்து ஐந்து (25) வருடங்கள் கழித்து அவனின் கனவில் இறைவன் தோன்றி தன வேண்டுகோளை
வைத்தான். 

♥அவன் மகன் திருமணத்தின் பொழுது
பெண் வீட்டாரிடம் இருந்து எந்த வரதட்சனையும் கேட்கக் கூடாது அந்த பெண்ணுக்கு நீ வரதட்சணை
கொடுத்து உன் மருமகளாக ஏற்றுகொள்ள
வேண்டும் என்றான் இறைவன். இதை கேட்டுஅதிர்ந்து போனான் அவன்.

♥பெண் பிள்ளை பிறந்தால் வரதட்சணை தரவேண்டுமே என்று தான் உன்னிடம் ஆண் பிள்ளை கேட்டேன், கேட்டது போல் ஆண் பிள்ளையை கொடுத்துவிட்டு இப்படி ஒரு பாரத்தை என் தலையில் சுமத்துகிறாயே இறைவா என்று
கதறினான்.

♥நீ வணங்க பெண் தெய்வம் வேண்டும்
உன்னை சுமக்க ஒரு பெண் வேண்டும்
நீ திருமணம் செய்துகொள்ள 
ஒரு பெண் வேண்டும்
உன்னை அரவணைக்க 
ஒரு பெண் வேண்டும்
உன்னை நினைத்தே உனக்காக 
உருக ஒரு பெண்
வேண்டும்
உன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெண் வேண்டும்  " 

♥உன் வாழ்க்கையில் பங்கு கொண்ட இத்தனை பெண்களும் உனக்கு பாரமாக தெரியவில்லை ஆனால் ஒன்றும் அறியா அந்த பெண் சிசு மட்டும் எப்படி
பாரமானது ?

♥நீ எவளவு வரதட்சணை கேட்டாலும் பெண்ணை பெற்றவர்கள் தரவேண்டும் ஆனால் உன்னிடம் யாரும் கேட்கக் கூடாது என்று நீ நினைப்பது எந்த விதத்தில் நியாயம் ?
"வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை பாரமாக தெரியாது...

Post a Comment

0 Comments