HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

குமரி மாவட்டத்தின் வரலாறு

குமரி மாவட்டத்தின் வரலாறு

குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார்
4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக
கி.மு.1500 முதல் 1000 - மாவது ஆண்டுகளுக்கு
இடையிலான கற்கால கோடரி கருவியின்
கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின்
வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம்
தெளிவாகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூர்
கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட
சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும்
பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள்
பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு
முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது.

இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள்
மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து
மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு
இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில்
தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு
இடமின்றி நம்பப்படுகிறது.

கடலடியில்

கண்டெடுக்கப்பட்டுள்ள
பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது
கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக
அழிந்துள்ளது என நம்பப்படுகிறது.
தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப்
பற்றிய தகவல்கள் முதன் முதலில்
பொனிஷியர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.
276-ல் இந்தியாவில் விஜயம் செய்த எநாஸ்தனிஸ்
என்பவரின் குறிப்பேட்டிலும் கன்னியாகுமரி பற்றிய
பதிவு உள்ளது. இக்குறிப்பேட்டில் “கொமரி" என்பது
துறைமுகமாகவும் அதுவரையிலும் உள்ள
நிலப்பகுதி பாண்டிய நாட்டின் பகுதியாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுருக்கமான
காலவரிசை

கி.பி.முதலாம் நூற்றாண்டு
டாலமி காலகட்டத்தில் நாஞ்சில் நாடானது
சேரர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே ஒரு
தாங்கலாக இருந்தது.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
சங்ககாலப் புலவர்களான மருதன் இளங்கனார்,
ஔவையார், ஒருச்சிறைப்பெரியனார் கருவூர்
கடைப்பிள்ளை போன்றோர்கள் நாஞ்சில்
பொருநரைப் போற்றிப் பாடிய பாடல்கள் மூலமாக
இவர் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி
செய்தார் எனத் தெரிய வருகின்றது.
கி.மு.மூன்றாம் நூற்றாண்டு

1. கடுங்கோன் - கி.பி. 560 - 590.
2. மாறவறம் அவனி சூலாமணி - கி.பி. 590 - 620.
3. சென்ட ன் - கி.பி. 620 - 650.
4. அரிகேசரி பரங்குச மாறவர்மன் - கி.பி. 650 - 700.
5. கோச்சடையன் - கி.பி. 700 - 730.
6. மாறவர்ம ராஜசிம்கா - கி.பி. 730 - 765.
7. ஜாக்கியா பரந்தாக நெடுஞ்சடையல் - கி.பி. 765 -

815.
8. ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபா - கி.பி. 815 - 862.
9. இரண்டாம் வரகுணா - கி.பி. 862 - 885.
0. பரந்தாட்ச வீர நாராயணன் - கி.பி. 880 -905.
1. இரண்டாம் மாறவர்ம இராமசிம்கா - கி.பி. 905 -
920.

கி.பி.பத்தாம் நூற்றாண்டு

சோழ வம்சத்தின் வளர்ச்சி:

உத்தம சோழ வளநாடு என நாஞ்சில் நாடு
குறிப்பிடப்பட்டுள்ளது. (1019 முதல் 1070) நாஞ்சில்
நாடானது சோழ பாண்டிய வைஸ்ராய்களால் ஆட்சி
செய்யப்பட்டது.
கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு

பாண்டியன் ஆட்சி காலம்:

வே நாடு அரசர்கள் ஆட்சிகாலம் 15 - ஆம்
நூற்றாண்டு வரை

கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு

கி.பி. 1532 முதல் 1558 வரை விஜய நகர பேரரசின்
கீழ் ஆட்சி நடைபெற்றது.

கி.பி.பதினாறாம் நூற்றாண்டு

மதுரை நாயக்கர் ஆட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தின் தற்கால வரலாறு
பாலமார்த்தாண்டம் வர்ம ஆட்சியில் (கி.பி. 1729 -
1758) தொடங்குகிறது.

வர்மாவின்

பிற்கால

பாலமார்த்தாண்ட
மன்னர்கள்

இராமவர்ம கார்த்திகைத் திருநாள் - 1758 - 1798

1. பால ராமவர்ம - 1798 - 1810
2. ராணி கௌரிலட்சுமிபாய் - 1811 - 1815
3. ராணி கௌரிபார்வதிபாய் - 1815 - 18295.
4. ராமவர்ம சுவாதி திருநாள் - 1829 - 1847
கி.பி.பதினேழாம் நூற்றாண்டு
1. மார்த்தாண்ட வர்ம உத்ராடம் திருநாள் 1847 - 1860
2. ராமவர்ம ஆயிலியம் திருநாள் 1860 -1880
3. ராமவர்ம விசாகம் திருநாள் 1880 - 1885
4. ஸ்ரீ மூலம் திருநாள் 1885 - 1924
5. ராணி சேதுலட்சுமிபாய் 1924-1932
6. ராமவர்ம ஸ்ரீ சித்திர திருநாள் 1932 - முதல்
மன்னர் ஆட்சி முடியும் 1949 செப்டம்பர் 1 வரை.

மேற்குறிப்பிட்ட அனைத்து மன்னர்களும்
ஆங்கிலேயர்களுடன் நல்லுறவு மேம்படுத்துவதே
தங்களது அயல்நாட்டுக் கொள்கையின் முக்கிய
கொள்கையாகக் கொண்டிருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் 1956 - வரை திருவாங்கூர்
சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1945
முதல் 1956 வரையிலான காலகட்டம் அதன்
தற்காலிக வரலாற்றில் முக்கிய பங்கு
வகிக்கின்றது.

1945
திருவாங்கூர் மாகாணத்தில் உள்ள அனைத்து
மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கினைந்த
கேரள மாநிலம் உருவாக்குவதற்காக ஒரு தீர்மானம்
திருவாங்கூர்

மாநில காங்கிரசால்
நிறைவேற்றப்பட்டது. திருவாங்கூர் மாகாணத்தின்
ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட
தமிழ்மொழி அதன் அங்கீகாரத்தை இழந்து
மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி
மொழியானது. இதனை தமிழர்கள் ஒரு
அவமானமாகக் கருதினர்.
1946
1946 ஜீன் 30 இல் அனைத்து திருவாங்கூர் தமிழ்
காங்கிரஸ் உருவானது. கன்னியாகுமரி
மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான
இயக்கத்தை மார்சல் நேசமணி அவர்கள்
வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றார்.

1947
திருவாங்கூர் மாநிலம் இந்திய யூனியனின் ஒரு
பகுதியானது.
1948
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் குமரி
மாவட்டத்தை முந்தைய மெட்ராஸ் மாகாணத்துடன்
இணைப்பதற்கான அழுத்தம் கொடுத்ததின் பேரில்
அப்போதைய இந்திய யூனியனின் துணைப்
பிரதமரான சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்
இக்கோரிக்கையை ஏற்று மொழி அடிப்படையில்
மாநில மறு சீரமைப்பின் போது இதை
நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்தார்.

1949
திருவாங்கூர் மற்றும் கொச்சின் மாகாணத்தை
இணைக்கும் முயற்சிக்கு எதிராக மிகக்
கடுமையான போராட்டம் நடந்த போதிலும் 1949 ஜீன்
முதல் நாளன்று இரண்டு மாநிலங்களும்
இணைக்கப்பட்டன.

1951 பொதுத்தேர்தல்

1952 - இல் சட்டசபையில் மாநில காங்கிரஸ்சுக்கு
அளித்து வந்த ஆதரவை திருவாங்கூர் தமிழ்
மாநில காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால்
அமைச்சரவை கவிழ்ந்தது.
1954 புதிய தேர்தல்
தமிழ் பேசும் பகுதிகளில் உள்ள 12 தொகுதிகளிலும்
திருவாங்கூர் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி
பெற்று அதன் பலத்தை உயர்த்திக் கொண்டது.
காலப்போக்கில் திருவாங்கூர் மாநில காங்கிரஸ்
இரண்டாகப் பிரிந்து ஏ.நேசமணி அவர்கள்
தலைமையில் ஒரு பிரிவும் திரு.பி. தாணிலிங்க
நாடார் அவர்கள் தலைமையில் ஒரு பிரிவுமாக
செயல்பட்டனர். மீண்டும் 1954 - இல் மார்ச் 29 -இல்
இரு அணிகளும் இணைந்து பி.ராமசாமிபிள்ளை
அவர்கள் கட்சியின் தலைவரானார். அதன் பின்னர்
நடந்த கிளர்ச்சிகள் , போராட்டங்கள், கடை
அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும்
பேரணிகளின் விளைவாக காவல்துறை
துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய உயிர்களை
இழக்கவேண்டி இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம்
மிக மோசமான நிலமைக்கு தள்ளப்பட்டதின்
காரணமாக அமைச்சரவை கவிழ்ந்தது.
திருவாங்கூர் கொச்சின் மாநிலத்தின் ஜனாதிபதி
ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1955
1955 முதல் ஏ.நேசமணி அவர்கள் திருவாங்கூர்
தமிழ் காங்கிரசின் தலைவரானார்.

1956 மாநில சீரமைப்புகக் குழு உருவாக்கப்பட்டது.

திருவாங்கூர் மாநிலத்தின் தெற்கு
தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம்,
கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை
மெட்ராஸ் மாநிலத்திற்கு மாற்ற இந்தக் குழு முடிவு
செய்தது.
1956 - நவம்பர் முதல் நாளன்று தோவாளை,
அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு
ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு
நாகர்கோவிலை தலைமை இடமாக கொண்டு
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம்
உருவாக்கப்பட்டது.

1966 - 1976
புதிய வருவாய் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.
தீர்வைத்துறை உருவாக்கப்பட்டது.
1976 - கிராமங்களை பிரித்தல்.
2012 - கிராமங்களை பிரித்தல்.

Post a Comment

0 Comments