HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெண்ணே

பெண்ணே..

தயக்கமும் மயக்கமும்
உன்னை தனிமைப்படுத்தவே செய்யும்.
நீ கூட்டத்தில்
ஒருத்தியாக வேண்டாம்.
உன் ஒருத்தியால்..
கூட்டமாகட்டும்.
யாரோடும்..
சேர்ந்த பெண்ணாக இரு
எவரோடும்..
சார்ந்த பெண்ணாக இருக்காதே

அனுதாபத்திற்கு
மயங்கிவிடாதே
அக்கறையை போர்த்திவிட்டு
அடிமைத்தனத்தில்
குளிர்காயும் கூட்டமுண்டு.
ஆறுதலாய் வார்த்தைகளில்
வசப்படுத்துபவர்கள்
தவறுதலாய் தோளில்
கை போடுபவர்களே.

அழகிற்கு மயங்கிவிடாதே
புகழ்ச்சியின் நிழலில்
நிற்க வைத்து
மகிழ்ச்சியின் நிலையில்
சொக்க வைத்து
உன் முகம் வருடியே
அகம் திருடும்.

கவிதைகளுக்கு மயங்கிவிடாதே
கற்பனைகள்..
கடை விரிக்கும் மேடையில்
நீ விற்பனைக்குரியவளென
சர்க்கரை தடவிய
வார்த்தைகளை
சந்தைப்படுத்துவது
கவிஞர்களுக்கு கலை.
காதலுக்கு அது வலை.
காமத்திற்கு காதல் விலை.

அதிகாரத்திற்கு அடிபணியாதே
வழிமறிக்கப்படும் பூனை
புலியாகுமென்பதை புரியவை
தீர்வை தேடிச்செல்லாதே
பிரச்சனையை..
பார்வையால் கொளுத்திவிடு.

வக்கிரங்களால் நிறைந்த
ஆண்களுக்கு மத்தியில்..
தொட்டால் சுடும் தீயாகவே இரு
உடைகளுக்குள்
ஒளிந்திருப்பது உடலல்ல
உக்ரமென்பதை காட்டு.
அவை உணர்ச்சிகளும்
உணர்வுகளும் நிறைந்த
உன்னதம் என்பதை 
பிரகடனப்படுத்து..
அது கூக்குரலாக அல்ல..
கொக்கரிப்பாக இருக்கட்டும்.
💢💢💢💢💢💢💢💢💢💢
நயினாரின் உணர்வுகள்.

Post a Comment

0 Comments