HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

உடலுக்கு பலம் தரும் பழைய கஞ்சி சாதம் பற்றி தெரிந்து கொள்வோம்

உடலுக்கு பலம் தரும் பழைய கஞ்சி சாதம் பற்றி தெரிந்து கொள்வோம்

நம் ஒவ்வொரு வீடுகளிலும் முதல் நாள் சோறு மிஞ்சுவது தண்ணீர் ஊற்றி மறுநாள் சாப்பிடும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கிறது. பழைய சாதத்தை அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன.

இன்னும் உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் "ட்ரில்லியன்" கணக்கில் உள்ளன. இந்த பாக்டீரியாக்கள் நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

காலையில் எழுந்ததும் பழைய கஞ்சி சாதம் அதனோடு கடித்துக் கொள்ள இரண்டு சிறிய வெங்காயம் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக பெருகும்.

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி கூறியதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால் உடல் லேசாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல் புண் வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்துகின்றது.

அதுமட்டுமல்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல வித்தியாசம் நமக்குத் தெரியும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும். உடல் எடையும் குறையும்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி அரிப்பு போன்றவை கூட சரியாகி விடும்.

அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர ஆச்சரியப்படும். அளவிற்குப் பலன் கிடைக்கும்

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அருகில்கூட வராது.

ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்

நாம் அனைவரும் இந்த பழைய கஞ்சி சாதத்தை சாப்பிட்டு பலன் அடைவோம்.

Post a Comment

0 Comments